Blog

Welcome to our blog!

கிறிஸ்தவக் கஞ்சன்

கிறிஸ்தவக் கஞ்சன்

வால் ஸ்ட்ரீட்டின் ஆகப் பெரிய பிசினஸ் ராஜாக்களெல்லாம் பணத்தை எப்படிப் பெருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பழைய, அழுக்கடைந்த ஒரே ஒரு கருப்பு நிற கவுனை அணிந்துகொண்டு நியூயார்க் வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர், ஹெட்டி க்ரீன். மின்னும் வைரங்களோ, கம்பீரமான அலுவலகங்களோ, பளபளக்கும் ஆட்களோ இவரிடம் இல்லை. கெமிக்கல் நேஷனல் என்கிற ஒரு வங்கியின் ஏதோ ஒரு மூலையில், பழைய ஆவணங்கள் நிறைந்த சில மரப்பெட்டிகளுக்கு நடுவேதான் இவரது சாம்ராஜ்யம் இயங்கியது. பசித்தால் உணவகங்களுக்குப்…

கொழுந்துவிட்டு எரிதல்

கொழுந்துவிட்டு எரிதல்

நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது அவருக்கு வயது பூஜ்ஜியம் அல்ல. அநேக கிறிஸ்தவர்களின் வேதாகமப் புரிதல் மத்தேயு சுவிசேஷத்தில்தான் தொடங்குகிறது; அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் உதித்தார் என்பதுபோல. ஆனால், புதிய ஏற்பாடே எழுதப்படாத அந்தக் காலத்தில், இயேசு தம் சீஷர்களுக்குப் போதித்தது ‘தாம் இருந்த’ பழைய ஏற்பாட்டைத்தான். கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட (Incarnation) நிகழ்வே தவிர, அவருடைய தொடக்கம் அல்ல. அவர் அநாதி தேவன். மீகா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில்  “அவருடைய புறப்படுதல்…

குற்ற உணர்வை மேற்கொள்வது எப்படி?

குற்ற உணர்வை மேற்கொள்வது எப்படி?

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். அது இயல்பானது. கிறிஸ்தவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, இரட்சிக்கப்பட்ட அனுபவத்தில் வாழும் கிறிஸ்வர்களுக்கும் குற்ற உணர்வு என்பது சவாலாக சில சமயங்களில் அமைந்துவிடும் விஷயம் என்பதால், இதைக் கொஞ்சம் தியானித்துத் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியம். தவறுகளை உணரும் எவரும் முதலில் தேவனிடம் கேட்பது மன்னிப்பைத்தான். ஆனால் கிறிஸ்துவுக்குள் மன்னிப்பை பெற்றுக்கொண்டவர்கள் தங்கள் தவறுகளை உணரும் அளவுக்கு தாங்கள் பெற்ற மன்னிப்பை உணர்வதில்லை என்பதுதான் குற்ற உணர்விலேயே அவர்கள் தொடரக்காரணம். குற்றம் செய்த உள்ளத்தில்…

நன்மைகளைப் பகிருங்கள்

நன்மைகளைப் பகிருங்கள்

நன்மைகளைப் பகிருங்கள் சில வசனங்களை நாம் அதிகமாகப் போதிக்கப்பட்டுக் கேட்டிருக்க முடியாது. அதில் ஒன்று கலாத்தியர் 6:6! “அன்றியும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மையானவைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்”. இந்த வசனத்தை நீங்கள் இதுவரை போதிக்கக் கேட்டதில்லை என்றால் அதற்குக் காரணம், நீங்களாகத்தான் இருக்க வேண்டும் அல்லது உங்கள் சபையாகத் தான் இருக்க வேண்டும்! அப்போஸ்தலனாகிய பவுல் தனது நிருபத்தில் இந்த விஷயத்தைக் குறித்து எழுதும்போது அவருக்குள் ஒரு சிறிய தயக்கம் இருந்திருக்கக்கூடும் என்று நாம் தாராளமாக நம்பலாம்….

இறை அங்கீகாரம்

இறை அங்கீகாரம்

தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன் உழைப்பையும் அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் ஒவ்வொரு மனித மனதின் ஆழத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருப்பதுதான். ஆனால், அசட்டை பண்ணப்பட்ட மனிதர்கள்தான் இந்த உலகில் பெரும்பான்மையினர்! ஆனால் நம் ஆண்டவர் அப்படியில்லை. விழுந்துபோன மனிதர்களிலும்கூடப் பலரைத் தெரிந்தெடுத்த் தேவன் தன் பிள்ளைகளாக அங்கீகரித்திருப்பதை வேதம் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறது. தேவன் மனிதனைத் தன் கரத்தின் கிரியையாகப் படைத்திருந்தாலும், அவனுடைய விசுவாசத்தையும் உண்மையையும் கண்டு, அவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்துவதில் தயங்குவதில்லை. வேதாகம வரலாற்றில்,…

வெறும் மூலக்கூறுகளா நாம்?

வெறும் மூலக்கூறுகளா நாம்?

குறைப்பியல் என்று அறிவியலிலும் தத்துவத்திலும் ஒரு கோட்பாடு உண்டு. ஆங்கிலத்தில் Reductionism. இது ஒரு சிக்கலான விஷயத்தை அதன் மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளின் தொகுப்புதான் அந்த முழுமை என்று வாதிடும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் குறைப்பியலுக்கு நல்ல உதாரணம் மனிதனை வெறும் ‘உயிரணுக்களின் தொகுப்பு’ (Biological Machine) என்று பார்ப்பது. நவீன அறிவியலாளர்கள் முன்வைக்கும் இந்த விஷயம் விசுவாசிகளுக்குச் சவாலாக அமையலாம். இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டாலும், இறைவனின் படைப்பாக நாம் எவ்வளவு…

தியாகம்

தியாகம்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. சில அதிர்ச்சி இரகம். பலவும் மிகவும் அதிர்ச்சி இரகம். ஏராளமான வினோத நிகழ்வுகளை இரண்டாம் உலகப்போரின் பின்னர் பத்திரிக்கைகள் எழுதித்தள்ளின. அதில், ஒன்று  விட்டோல்ட் பிலெக்கியின் (Witold Pilecki) தீரக் கதை. அமெரிக்காவின் தலைமையில் ஹிட்லரை எதிர்த்து நின்ற கூட்டுப் படைகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள் நடப்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள விரும்பினர். இந்த ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள்தான் சுமார் 40 இலட்சம் யூதர்களாவது ஹிட்லரின் ஆட்களால்…

ஆபத்தான சுதந்திரம்!

ஆபத்தான சுதந்திரம்!

தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…

சரணடைதல் எனும் வாசல்

சரணடைதல் எனும் வாசல்

என் வாழ்க்கையில் பல தருணங்களில் நான் அப்படியே தளர்ந்து போயிருக்கிறேன். அது வெறும் உடல் சோர்வு மட்டுமல்ல; அது ஒருவிதமான ஆத்தும இளைப்பு. ஓடிக்கொண்டே இருப்பதிலும், போராடுவதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் நமக்குப் புரியும்படி மாற்ற முயல்வதிலும் வந்த சோர்வு அது. நான் ஜெபிப்பேன், ஆனால் கவலைப்படுவதை நிறுத்தமாட்டேன். விசுவாசிப்பேன், ஆனால் விளைவுகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே துடிப்பேன். தேவனுடைய சமாதானம் எனக்கு வேண்டும் என்று கேட்பேன், ஆனால் என் திட்டங்களை மட்டும் விடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில், என் இதயத்தின் ஆழத்தில் ஒரு…

யூதர்களும் கிறிஸ்தவர்களும்: இன்றைய சூழலில் ஒரு வேதாகமப் பார்வை

யூதர்களும் கிறிஸ்தவர்களும்: இன்றைய சூழலில் ஒரு வேதாகமப் பார்வை

உலக வரைபடத்தில் இஸ்ரவேல் ஒரு தேசமாக மட்டும் இல்லை; அது மீண்டும் உருப்பெற்ற காலத்தில் இருந்தே விவாதங்களின் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொன்னால், பல ஆயிர ஆண்டு சர்ச்சை வரலாறு ஒரு நாட்டுக்கு இருக்குமென்றால் அது இஸ்ரேல் தேசம் அல்லது யூதர்களைக் குறித்ததாகத்தான் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களைக் குறித்த ஒரு குழப்பம் உண்டு. ஒருபுறம், “அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவர்களுக்கு நாம் நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும்” என உணர்ச்சிவசப்படும் ஒரு கூட்டம்; மறுபுறம், “அவர்கள்…