பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை
வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம். இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல்…
நாடு இல்லாத ஒரு நாடு
நாடு கடந்த அரசு (Provisional Transitional Government) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இலங்கைத் தீவில் ஈழம் தனியே மலரவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டில் பல நாடுகளிலும் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மனம் தளராமல் “நாடுகடந்த தமீழ் ஈழம்” என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அதாவது தங்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பு நாடாக இல்லாவிட்டாலும், மனங்களில் ஒன்றுபட்டு ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு உருத்திரகுமாரன் என்பவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தையும் வகுத்தார்கள். நாடும் அதன் அமைவிடமும் ஒரு நாடு…
ஒரு அதிரடி அற்புதம்
கேள்வி: தேவன் ஒரு பெரிய அற்புதம் செய்து ஏன் அனைவைரையும் கிறிஸ்தவராக மாற்றிவிடக்கூடாது? பூமி இரண்டாகவோ, இல்லையென்றால் இந்துமா சமுத்திரம் வற்றினாலோ, எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் அல்லவா? பதில்: ஆஹா, நல்ல கேள்விதான், ஆனால் கொஞ்சம் நிதானமாகத் தியானித்தால் இது எவ்வளவு ஒரு அபத்தமான சிந்தனை என்பது புரியும். ஆம், இறைவனால் ஒரு மகா பிரமாண்டமான அற்புதத்தை நிகழ்த்த முடியும்தான். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஏன் அவர் என் விருப்பபடி ஒரு…
முற்றிற்று
இந்திய வேதாகமச் சங்கத்தால் வெளியிடப்படும் வேதாகமங்களில் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் நாம் பார்க்க இயலும் வாசகம் ‘பழைய ஏற்பாடு முற்றிற்று’ மற்றும் ‘புதிய ஏற்பாடு முற்றிற்று’. முற்றிற்று என்பதன் முழு நோக்கம், இனி வேறு இல்லை என்றும், எழுதிக்கொடுக்கப்பட்ட தேவவார்த்தைகளால், வேதாகமம் முற்றுப்பெற்றாயிற்று; இனி பிற சேர்மானங்களுக்கு இடமில்லை என்பதுதான்!. ஆனால், நம் கையில் இருக்கும் வேதாகமம் போதாது என்று சொல்வதில் இருந்து வேதாகமம் முழுமையானது அல்ல என்று சொல்வதுவரை பலவிதமான போதனைகள் உபதேசிக்கப்பட்டு வந்திருக்கின்றன….
நீண்ட நெடிய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை
“ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்” (A Long Obedience in the Same Direction) எனும் சொற்றொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபலமான ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவால் முன்வைக்கப்பட்ட ஒன்று. இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கீழ்படிதல் என்றும் சொல்லாம். அதைக்குறித்து முதன்முதலில் அவரது “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (Beyond Good and Evil) எனும் நூலில் எழுதியிருந்தார். நீட்சே, சடங்கு மதங்களின் மீதும் பாரம்பரிய ஒழுக்கவியலின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர். ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்குத்…
எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…
இழப்பவன் முட்டாள் அல்ல!
ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது. வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது…
ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புக்கள்
Image Source:https://bible-history.com ஒரு நல்ல ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? நீங்கள் தமிழ் வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம் தாத்தா கையெழுத்து காணப்படும் பழைய சிறு KJV வேதாமம் அல்ல. அது பத்திரமாக இருக்கட்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகாதவர்களுக்கான தொடக்கநாட்களுக்கான வேதாகமம் அது அல்ல. அதை வாசித்தால் பின்பு ஆங்கிலமே கசக்கக் கூடும். சுமார்…
சட்டம் ஒரு சங்கடம்
“இதென்ன உன் இடம்ணு எழுதி வச்சிருக்கா?” பள்ளியில் மாணவர்கள் இடையே இடத்தகறாறு வரும்போது வரும் வார்த்தைகள் இவை. இப்படிக் கேட்பதற்குக் காரணம் எழுத்துக்கு அல்லது எழுதப்பட்ட வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதுதான். நிலப்பத்திரம் நாமறிந்த ஒரு நல்ல உதாரணம். ஒரு விண்ணப்பத்தைக்கூட எழுத்தில் கேட்டால்தான் அதற்குண்டான மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறது. துவக்கத்தில் தன் சாயலை தேவன் மனிதனுள் வைக்கும்போது அவருடைய பிரமாணங்களை இருதயத்தில்தான் வைத்தார். இருதயம் ஒரு எழுத்துப் பலகை. அதில் எப்போதும் விஷயங்கள் எழுதப்பட்டுக்கொண்டே தான்…
டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு
எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…