தீர்க்கதரிசனப் புத்தகங்கள்: ஒரு எளிய அறிமுகம்
பழைய ஏற்பாட்டில் வாசிக்க சவாலானவை என்றால் அது தீர்க்கதரிசன புத்தகங்கள் தான். கிறிஸ்தவர்களுக்குத் தீர்க்கதரிசனம் பிடிக்கிற அளவுக்கு, தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் பிடிக்காததற்குக் காரணம் அவற்றின் கடின நடைதான். ஆனால் அவர்கள்தான் தேவனது பிரதிநிதிகளாகப் பூமியில் இருந்தவர்கள். இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த அவர்கள் வழியாகத்தான் தேவன் பேசினார். அவர் தெரிந்துகொண்ட அந்தப் பாத்திரங்களின் வேலை அவ்வளவு இலகுவாக இல்லை. காரணம் அவர்கள் வழியாக தேவன் பேசியவை கடினமானவை என்பதல்ல, அதைக் கேட்டு இணங்காத வணங்காக் கழுத்துள்ள கடின இருதய…
தேவனின் இறையாண்மை: அகிலத்தை ஆளும் ஏகாதிபத்தியம்!
“அவரின்றி ஓரணுவும் அசையாது” – இது நம் முன்னோர் இறைமொழி. இதிலிருக்கும் ஆழமான இறையியல் உண்மைதான் இறைவனுடைய இறையாண்மை (Sovereignty of God)! அதற்கு இன்னும் சிறப்பான பெயர்: ஏகாதிபத்தியம்! இறையாண்மை என்கிற இந்த வார்த்தையை அடிக்கடி அரசியல்வாதிகள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்த இறையாண்மை என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்தின் மீது இறைவனுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு. தேவன் ஒரு அதிகாரம் மிக்க சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்; எனவே தற்செயலாக எதுவும் இங்கே…
பழைய துருத்தி புதிய ரசம்
ரொம்பநாளாக அதிகம் தியானிக்காமல் விட்டுவைத்திருந்த விஷயம். பழைய மொந்தையில் புதிய கள்ளு என்று நம்மூரில் சொல்லும் ஒரு விஷயத்தை அருள்நாதரும் அந்தக்காலத்திலேயே அந்த ஊர் மக்களுக்கேற்பச் சொல்லி இருக்கிறார். “புதுத் திராட்சரசத்தைப் பழைய துருத்திகளில் வார்த்து வைக்கிறதில்லை; வார்த்து வைத்தால், துருத்திகள் வெடித்துப்போகும், ரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுத் திராட்சரசத்தைப் புதிய துருத்திகளில் வார்த்து வைக்கிறார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.” மத்தேயு 9:17-ல் அருள்நாதர் முன்வைக்கும் தர்க்கம் வெறும் தோல்துருத்தி – திராட்சரசத்தைப் பற்றியதல்ல; கிறிஸ்தவனின் ஆவிக்குரிய…
பைபிள் ‘காப்பி’யடிக்கப்பட்ட புத்தகமா?
“நோவாவின் ஜலப்பிரளயமா? அதெல்லாம் சும்மா! எபிரெயர்கள் தங்களுக்கு முன்னிருந்த பாபிலோனியர்களின் புராணங்களை உருவி, பைபிளில் சேர்த்துவிட்டார்கள். மோசே கூட ஹமுராபியின் சட்டங்களைப் பார்த்து காப்பியடித்துதான் பத்துக்கட்டளைகளை எழுதினார்.” — அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் இறைமறுப்பாளர்களும், கிறிஸ்தவத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களும் போகிற போக்கில் வீசும் வார்த்தைகள் இவை. பெரும்பாலும் இதைச் சொல்பவர்கள் கில்காமேஷ் காவியத்தையோ, ஹமுராபியின் சட்டத்தையோ அல்லது பாபிலோனிய படைப்பு காவியமான ‘எனுமா எலிஷ்’ பற்றியோ முழுமையாகப் படித்திருப்பார்கள் என்று நம்ப முகாந்தரமில்லை. ஏன்,…
நாம் ஏற்கனவே அங்கேதான் இருக்கிறோம்!
(நித்தியம் குறித்த ஒரு பார்வை) ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) மூலம் கடந்த காலத்திற்கோ, அல்லது எதிர்காலத்திற்கோ பயணம் செய்வது என்பது பலரும் ஏங்கும் ஒரு விஷயம். திரைப்படங்களில் இத்தகைய பயணங்களைப் பார்ப்பதே நமக்கு ஆச்சரியம் ஊட்டும் விஷயம்தான்! (ஐய்யகோ… ஒரு கிறிஸ்தவன் சினிமா பார்ப்பதா? – என்று அதிராமல் தொடர்ந்து வாசியுங்கள் ப்ளீஸ்) எனக்கும் 80-களுக்குத் திரும்பிச் சென்று, நாங்கள் வசித்த அந்த ஹவுசிங் போர்டு காலனியில் என் நண்பர்களுடன் ‘மரக்குரங்கு’ விளையாட வேண்டும் என்கிற…
ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்
இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும் 2026-ம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவு தொழில்நுட்பமும், அதன் வழியாகக் கிடைத்திருக்கும் இணைப்புகளும் தொடர்புகளுமாகத் துவங்கியிருக்கிறது. எவரையும் தொடர்பு கொள்ளலாம், எதிலும் இணைந்துகொள்ளலாம், கற்கலாம், அறியலாம்…! இப்படி நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும், நம்மைச் சுற்றியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த (AI) தொழில்நுட்பங்களும் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கலாம். ஆனால், மனித மனம் அமைதியாக இருக்கிறதா? என்றால், நிச்சயமாக முன்புபோல “இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்! சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பு…
கோபங்கொண்ட தேவனுடைய கரத்தில் பாவிகள்
கிறிஸ்தவ வரலாற்றிலேயே மறக்கமுடியாத, அஸ்திபாரங்களை அசைத்த பல பிரசங்கங்களில் முதன்மையானது ஜோனாதன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அவர்கள் 1741-ம் ஆண்டு பிரசங்கித்த “கோபங்கொண்ட கடவுளின் கரத்தில் பாவிகள்” (Sinners in the Hands of an Angry God) என்னும் இச்செய்தி. அமெரிக்காவில் “பெரிய விழிப்புணர்வு” (Great Awakening) நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், என்ஃபீல்ட் (Enfield) என்ற இடத்தில் இது பிரசங்கிக்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், தேவனுடைய உக்கிரகோபத்தையும், நரகத்தின் பயங்கரத்தையும் ஆவியானவரின் மூலமாக உணர்த்தப்பட்டபோது, தாங்கள் அந்த…
விதியா? அல்லது பிதாவின் சித்தமா? – ஒரு தெளிவு
கேள்வி: “நம் வாழ்வில் நடப்பதெல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியதிப்படிதான் (Fate) நடக்கிறது. நமக்கு சாதகமானால் அதை ‘தேவ சித்தம்’ என்கிறோம்; பாதகமானால் ‘சோதனை’ என்று சமாதானம் செய்துகொள்கிறோம். உண்மையில் நாம் ஒரு ‘ஸ்கிரிப்ட்’ (Script) படி நடிக்கும் பொம்மைகளா? கிறிஸ்தவம் சொல்லும் தேவ சித்தம் என்பது வேறு பெயரில் அழைக்கப்படும் விதிதானா?” பதில்: இந்தக் கேள்வி மேலோட்டமாகப் பார்க்கும்போது மிகச் சரியான ஒரு தர்க்கம் போலத் தோன்றும். கிரேக்க தத்துவத்தில் இதை Stoicism என்பார்கள். அதாவது,…
வேதத்துக்கு வெளியே இருந்துவரும் ஆதாரம் – ஜோசிபஸ்
இந்த பூமியில் இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை நான்கு சுவிசேஷங்களில் நமக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதுவும் நான் வெவ்வேறு நபர்களால் நான்கு சுவிசேஷங்களாக – மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்று! . ஆனால், வேதாகமத்தில் இடம்பெறாத ஒரு மனிதர், இயேசு வாழ்ந்த காலத்தையும், அப்போஸ்தலர் காலத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அவரைக் குறித்துக் கொஞ்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஃபிளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus). பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் இவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பொதுவாகவே…
அறிவியல் வளர வளர இறைவன் தேவைப்படமாட்டாரா?
“அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதனால், அறிவியலுக்கு இன்னும் சிறிது காலம் கொடுங்கள்; மதங்கள், குறிப்பாக கிறிஸ்தவம் அதன்பின் அவசியம் இல்லாமல் போய்விடும்” என்பது சில கடவுள் மறுப்பாளர்களின் வாதம். அதாவது, அறிவியல் வளர வளர, இறைவன் தேவையற்றவர் ஆகிவிடுவார் என்பது இவர்களுடைய எண்ணம். ஆனால், இந்த எண்ணம் மெய்யறிவுக்கு (Truth) முற்றிலும் புறம்பானது. இன்று நாம் வாழும் உலகம் அறிவியலால் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். நேற்று முடியாத பல காரியங்கள் இன்று சாதாரணமாக நடக்கிறது; அறிவியலால்…