கிறிஸ்தவ வாழ்வு

கிறிஸ்தவ வாழ்வு – கிறிஸ்துவின் வாழ்வு!

ஆபத்தான சுதந்திரம்!

ஆபத்தான சுதந்திரம்!

தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…

சரணடைதல் எனும் வாசல்

சரணடைதல் எனும் வாசல்

என் வாழ்க்கையில் பல தருணங்களில் நான் அப்படியே தளர்ந்து போயிருக்கிறேன். அது வெறும் உடல் சோர்வு மட்டுமல்ல; அது ஒருவிதமான ஆத்தும இளைப்பு. ஓடிக்கொண்டே இருப்பதிலும், போராடுவதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் நமக்குப் புரியும்படி மாற்ற முயல்வதிலும் வந்த சோர்வு அது. நான் ஜெபிப்பேன், ஆனால் கவலைப்படுவதை நிறுத்தமாட்டேன். விசுவாசிப்பேன், ஆனால் விளைவுகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே துடிப்பேன். தேவனுடைய சமாதானம் எனக்கு வேண்டும் என்று கேட்பேன், ஆனால் என் திட்டங்களை மட்டும் விடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில், என் இதயத்தின் ஆழத்தில் ஒரு…

தெய்வீகப் பேச்சு!

தெய்வீகப் பேச்சு!

நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். மற்றவர் மதிக்கும் வண்ணம் பேசவேண்டும். எல்லாம் சரிதான். ஆனால், தேவ வார்த்தைகளைப் பேசமுடியுமா? அதுவும் தேவனே பேசுவதுபோல்? அப்படி ஒரு மனிதன் பேசும் வார்த்தையை, தேவன் அப்படியே தன் வார்த்தையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவது சாத்தியமா? 1 இராஜாக்கள் 17-ல் எலியா ஆகாபுக்கு முன்பாக நின்று, “கர்த்தர் சொல்லுகிறார்” என்று ஒரு செய்தியாளராக மட்டும் பேசவில்லை. மாறாக, “என் வாக்கின்படியே அன்றி…” என்று ஒரு அதிகாரத் தொனியில் முழங்குகிறார். வானத்தை அடைக்கும் சாவியைத் தான்…

கோபம், எரிச்சல், பயம் வருத்தம் – இவைகள் பாவங்களா?

கோபம், எரிச்சல், பயம் வருத்தம் – இவைகள் பாவங்களா?

கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் ‘அகிறிஸ்தவ’ உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு: கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களே தங்கள் தன்மைகளை மாற்றிக்கொண்டு இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. “கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபேசியர் 4:26). இந்த வசனம் சொல்வது போல, கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் என்பது அந்த…

நீண்ட நெடிய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை

நீண்ட நெடிய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை

“ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்” (A Long Obedience in the Same Direction) எனும் சொற்றொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபலமான ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவால் முன்வைக்கப்பட்ட ஒன்று. இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கீழ்படிதல் என்றும் சொல்லாம். அதைக்குறித்து முதன்முதலில் அவரது “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (Beyond Good and Evil) எனும் நூலில் எழுதியிருந்தார். நீட்சே, சடங்கு மதங்களின் மீதும் பாரம்பரிய ஒழுக்கவியலின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர். ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்குத்…

எளிய ஜெபம்

எளிய ஜெபம்

ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…

இழப்பவன் முட்டாள் அல்ல!

இழப்பவன் முட்டாள் அல்ல!

ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது.  வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால்,  தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது…

டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு

டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு

எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…

பியூரிட்டன் போதகர்கள்

பியூரிட்டன் போதகர்கள்

பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள். பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர்,…

உரிமையாளர்: இயேசுக்கிறிஸ்து

உரிமையாளர்: இயேசுக்கிறிஸ்து

“நம் ஒவ்வொருவருடைய வாழ்வில் தேவன் தன்னுடையது என்று சொந்தம் பாராட்டக்கூடாத ஒரு சதுர அங்குலம் கூட இல்லை” என்றார் ஆபிரகாம் குய்பர். இவர் ஹாலந்து நாட்டின் முன்னாள் பிரதமர், நல்ல இறையிலளாரும் கூட.  இறையியல் அறிந்த போதகர்கள் எல்லாம் நாட்டின் பிரதமராக இருந்தார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால், பதிவு ஐயா குய்பரைப் பற்றியதல்ல. (நான் மொழிபெயர்ப்புக்காக சற்றே மாற்றி இருக்கிறேன்). அவர் சொன்னதன் பொருள், உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிக்கும் தேவனே உரிமையாளர். அவரால்  தமக்குச்…