குற்ற உணர்வை மேற்கொள்வது எப்படி?
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். அது இயல்பானது. கிறிஸ்தவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, இரட்சிக்கப்பட்ட அனுபவத்தில் வாழும் கிறிஸ்வர்களுக்கும் குற்ற உணர்வு என்பது சவாலாக சில சமயங்களில் அமைந்துவிடும் விஷயம் என்பதால், இதைக் கொஞ்சம் தியானித்துத் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியம். தவறுகளை உணரும் எவரும் முதலில் தேவனிடம் கேட்பது மன்னிப்பைத்தான். ஆனால் கிறிஸ்துவுக்குள் மன்னிப்பை பெற்றுக்கொண்டவர்கள் தங்கள் தவறுகளை உணரும் அளவுக்கு தாங்கள் பெற்ற மன்னிப்பை உணர்வதில்லை என்பதுதான் குற்ற உணர்விலேயே அவர்கள் தொடரக்காரணம். குற்றம் செய்த உள்ளத்தில்…