உணர்ச்சிப் பொங்கல்!
ஒரு நிகழ்வு குறித்து நாம் பெறும் அறிதல், மற்றும் புரிதலே உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதமே உணர்ச்சி. உணர்வு – Understanding after knowing.உணர்ச்சி – Feeling. தேவன் என்னை இரட்சித்திருக்கிறார் என்பது அறிதலால் வருவது உணர்வு. அதைச் சார்ந்து அவருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும் உணர்ச்சி சரியானது. சும்மா பாடுதல், ஆடுதல், கைகளை உயர்த்தி வெறுமனே சத்தமிடல், ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசம் அடைந்து சத்தமிடல், கண்ணீர் சொறிதல், புல்லரித்தல், அந்நியபாஷையில் பேசுதல் – இதற்கும்…
சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?
ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன். “சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில்…
நான் யார்?
வேலைக்கான இண்டர்வியூ சென்றிருக்கிறீர்களா? அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி – ‘உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்பார்கள். அதுவரை யோசிக்கவில்லை என்றால் திகிரென்று கூட இருக்கும். “நா…நா.. வந்து, என் பேரு..” என்று நாக்குக் குழறுவதில் இருந்து, இல்லாத பொல்லாத விஷயங்களைக்கூட நம்மைப் பற்றி என்று சொல்லக்கூடிய இடம் இண்டர்வியூக்கள். நம்முடைய அடையாளங்கள் பொதுவாக நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கும், அடுத்தவர் அறிந்திருப்பதற்குமே கூடப் பல முரண்கள் இருக்கும் என்பதால் நம்முடைய…
கிறிஸ்தவக் கிறிஸ்தவன்
நீங்கள் எந்தச் சபைக்குச் செல்வோராக இருந்தாலும் அங்கே சும்மா ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்று உட்கார்ந்து எழுந்துவரும் கிறிஸ்தவராக இல்லாமல் – கிறிஸ்துவின் சீஷராக இருக்க சில விஷயங்களைக் குறித்த அறிவும் செயல்பாடும் அவசியம். (அவைகளை “குறைந்தது” ஏழு வகையாக கீழே பிரிக்க முயல்கிறேன்.) இவற்றில் பெரும்பாலான விஷயங்களை தவிர்த்துவிட்டு – பணச் செழிப்பு, ‘எங்கே விழுந்தீர்களோ அங்கேயே உயர்த்துவார்’, இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்..சுகம், என்பதான வார்த்தை ஜாலங்கள், ஆட்டம் பாட்டம் என்று பொழுதுபோக்கு என்றிருந்தால் மேலே…
தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?
நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. (அல்லது சம்பந்தமே இல்லை). நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய நினைத்து, தன் திட்டதில் ஏதோ குறையைப் பாதிவழியில் கண்டுபிடித்ததால் மாற்றிக்கொண்டார் என்று ஐயப்பட வழியே இல்லை. காரணம், அப்படி இருந்தால் அவர் இறைவன் அல்ல. அப்படி அவர் முடிவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பாரானால், நம்மைபோல அவரும் குழப்பமானவராகத்தான் இருப்பார் என்று கருதவே வாய்ப்புண்டு. மாறாக நாம் அவரை விசுவாசிக்கக் காரணமே, அவர் என்றும்…
எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்
முன்பு ஒரு பதிவில் கோல்டிலாக்ஸ் என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குச் சரியான ஒற்றைப் பதம் தமிழில் என்னவென்று தெரியவில்லை. இதைச் “சரியான, பொருத்தமான” என்று சொல்லலாம். “கோல்டிலாக்ஸ்” என்ற இந்தப் பதம், “கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்” என்ற சிறுவர் கற்பனைக் கதையிலிருந்து வந்த ஒரு சொல். (ஆங்கிலத்தில் இதுபோன்று பல வார்த்தைகள் புதுசு புதுசாகத் தோன்றுவதுண்டு). இக்கதையில் வரும் கோல்டிலாக்ஸ் ஒரு சிறுமி. அவள் அங்கு கஞ்சி நிரப்பப்பட்ட கோப்பைகளில் ஒன்றை “மிகவும் சூடாக”, இன்னொன்றை “மிகவும்…
கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!
இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன் வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா? இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம்…
என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!
காத்திருப்பு கடினம். சில நிமிடம் கம்யூட்டர் boot ஆகும் நேரம் என்றாலும் சரி, ஒரு அலுவலகத்தில் வரவேண்டியவர் வந்து உட்காரவேண்டியவர் வரும் வரை அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதும் சரி… கடினம்தான். எனக்கு பில்லிங் கவுண்டர்களில் காத்திருப்பது கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணும். பொருளை வாங்கிக் காசு கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைப்பதுதான் காரணம்! வாட்ஸப்பில் இரண்டு ப்ளூடிக்குகள் வரும்வரை காத்திருக்கமல் ஃபோன் போட்டுவிடுபவர்கள் உண்டு. காத்திருப்பு அவஸ்தை!. காரணம் அது நம்மிடம் இருக்க வேண்டிய, ஆனால் இல்லாத…
உனக்கு நரகம் தான்!
ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார். இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…
வேற யாராவது இருக்கீங்களா?
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1: 27 தேவன் மனிதர்களைப் படைத்ததுபோல வேறெங்கேனும் படைத்திருப்பாரா? இங்கு வேறு யாரேனும் உள்ளனரா? பூமியைப் படைத்து அதன் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தவருக்கு வேறு எங்கேனும் அங்கிருக்கும் மண்ணை/தனிமங்களைக் கொண்டு அங்கே உயிரினங்களைப் படைத்திருப்பாரா? அதாவது ஏலியன்களை? 1950 ஆண்டு ஒரு சிறுகூட்டம் இயற்பியலாளர்கள் கூடி UFO (Unidentified Flying Object) என்கிற வானத்தில் அவ்வப்போது தெரியும்…