கிறிஸ்தவ வாழ்வு

கிறிஸ்தவ வாழ்வு – கிறிஸ்துவின் வாழ்வு!

உணர்ச்சிகளில் மாற்றம் 

உணர்ச்சிகளில் மாற்றம் 

கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் “அகிறிஸ்தவ” உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு.  உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது  அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களின் சுபாவங்களே இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் அதன் விளைவுதான். அநீதியின்பால் கோபம் கொள்ளல், அநியாயத்தின்மேல் எரிச்சல் அடைதல், தேவனுக்குப் பயப்படுதல், பிறர் வருத்தம் கண்டு…

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?

நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு  உண்டு.   நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால்,  நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள். ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக…

போதக ஐக்கியம்

போதக ஐக்கியம்

“பிறரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள மனமற்ற போதககர்கள் மிகவும் அபாயமான ஆசாமிகள்” என்று பல வருடங்கள் முன் எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ( பாஸ். மேத்யூஸ்) ஒரு முறை சொன்னார். அப்பொல்லோவைப் போல வேதாகமங்களில் வல்லவர்களாகவும், ஆவியில் அனலுள்ளவர்களாகவும், திட்டமாய் போதகம் பண்ணுபவர்களாக இருந்தாலும், நீங்களும், அதிக திட்டமாய் இறைவழியை விவரிக்கும் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போன்ற மக்களை ஐக்கியத்தில் – உங்கள் வட்டத்தில் – வைத்திருப்பது அவசியம். உங்கள் உபதேசங்கள் ஆவியானவரால்தான் உறுதி செய்யப்படுகின்றன என்றாலும் ஐக்கியம்…

உணர்ச்சிப் பொங்கல்!

உணர்ச்சிப் பொங்கல்!

ஒரு நிகழ்வு குறித்து நாம் பெறும் அறிதல், மற்றும் புரிதலே உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதமே உணர்ச்சி. உணர்வு – Understanding after knowing.உணர்ச்சி – Feeling. தேவன் என்னை இரட்சித்திருக்கிறார் என்பது அறிதலால் வருவது உணர்வு. அதைச் சார்ந்து அவருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும் உணர்ச்சி சரியானது. சும்மா பாடுதல், ஆடுதல், கைகளை உயர்த்தி வெறுமனே சத்தமிடல், ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசம் அடைந்து சத்தமிடல், கண்ணீர் சொறிதல், புல்லரித்தல், அந்நியபாஷையில் பேசுதல் – இதற்கும்…

சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?

சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?

ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன்.  “சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில்…

என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!

என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!

காத்திருப்பு கடினம். சில நிமிடம் கம்யூட்டர் boot ஆகும் நேரம் என்றாலும் சரி,  ஒரு அலுவலகத்தில் வரவேண்டியவர் வந்து உட்காரவேண்டியவர் வரும் வரை அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதும் சரி… கடினம்தான். எனக்கு பில்லிங் கவுண்டர்களில் காத்திருப்பது கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணும். பொருளை வாங்கிக் காசு கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைப்பதுதான் காரணம்! வாட்ஸப்பில் இரண்டு ப்ளூடிக்குகள் வரும்வரை காத்திருக்கமல் ஃபோன் போட்டுவிடுபவர்கள் உண்டு. காத்திருப்பு அவஸ்தை!.  காரணம் அது நம்மிடம் இருக்க வேண்டிய, ஆனால் இல்லாத…

உனக்கு நரகம் தான்!

உனக்கு நரகம் தான்!

ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார்.  இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…

முரட்டுப் பக்தர்கள்

முரட்டுப் பக்தர்கள்

ஆங்கிலத்தில் லீகலிஸம் (Legalism) என்கிற வார்த்தை உண்டு. கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை இது. இதன் அர்த்தம் “கடவுள் இதைத்தான் செய்யச் சொல்கிறார் என்று அவர் சொல்லாத ஒன்றைச் செய்யச் சொன்னதாக நினைத்துக்கொண்டிருப்பது”. தமிழில் இதைச் சட்டவாதம் என்று சொல்லலாம். “இதைச் செய்தால் சரி, இதைச் செய்யாவிட்டால் உன் அபிஷேகம் அம்பேல். இப்படிச் செய்தால் இரட்சிப்பு போச்சி!” என்று சொந்த விருப்பங்களை வேதம் காட்டும் ஒழுக்க நெறிகளாகத் திணிப்பதே இந்தச் சட்டவாதம். பெந்தேகோஸ்தே சபைகளில்தான் இதை அதிகமாக…

இந்த நம்பிக்கை!


இந்த நம்பிக்கை!


கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் எங்கள் நம்பிக்கை வீண். நாங்கள் உரைக்கும் எந்தவார்த்தையும் வீண் என்கிறார் பவுல். அவர் உயிர்தெழுந்திருக்காவிட்டால், கிறிஸ்தவமும் வீண். கிறிஸ்தவர்களும் வீண். நாமெல்லாம் வெறும் முட்டாள்களாக இருந்திருப்போம். ஆனால், இது எப்படிப்பட்ட நம்பிக்கை? 2000த்துச் சொச்சம் வருடங்களாக, தலைமுறை தலைமுறைகளாக வரும் இந்த நம்பிக்கை வெறும் முரட்டுப் பக்தர்களால் பின்பற்றப்படும் குருட்டு நம்பிக்கை அல்ல. மாறாக, பெரும் சவால்களையும், எதிர்விவாதங்களையும் முறியடித்துத் தாங்கி வந்த நம்பிக்கை. கண்கள் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளால் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள்…

அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும் 


அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும் 


ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஆர்டிக் பகுதியில் வசிக்கும் ஒரு எஸ்கிமோ குடும்பத்தைப் பற்றியது. ஆர்டிக், அண்டார்டிகா (-58°F), அலாஸ்கா என்றாலே நாம் குஷியாகிவிடுவதுண்டு அல்லவா?. அதற்கு அங்கிருக்கும் ஐஸ் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கை முறையும் கூட – அது மிகவும் வித்தியாசமானதும், ஆச்சரியங்களும் நிறைந்தது.  ஆர்டிக் பகுதில் மேலே ஐஸ்கட்டியும், கீழே நீரோட்டமும் கொண்ட பகுதிகள் ஏராளம். இவ்வாறு நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தாலும், கீழே சில அடிகளுக்குப் பின் இருப்பது ஆழமான உறையவைக்கும் நீர்ப்பகுதிதான். (சூரியன்…