கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல்

Dark Matter Dark Energy

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல் (Dark Matter and Dark Energy)

வானத்தை அண்ணாந்து பார்த்தால் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் சில கோள்கள், சந்திரன் என்று தெரிகிறதல்லா? அதைவிட்டு மீதி எல்லாம் இருள் மயம். இந்த இருளான பகுதிகள் எல்லாம் வெற்றிடங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களால், அது தவறு. அவைகள் எல்லாம் நிறம் இல்லாத பருப் பொருள்கள். கண்ணால் காணப்படமுடியாததை ஆனால், பிரமாண்டமாக ஆற்றலைத் தேக்கிவைத்திருப்பவை. எவ்வளவு ஆற்றல்? கேலக்ஸிகள் எனப்படும் நட்சத்திரக்கூட்டங்களை தள்ளிக்கொண்டு போகும் அளவு அல்லது இழுத்து ஒன்றுடன் ஒன்றை மோதவிடம் அளவுக்கு!

இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் என்பன பிரபஞ்சத்தின் 95% வரை உள்ள மர்மமான ஆற்றல்களாகும். இருப்பினும், அவை கண்ணுக்கு தெரியாதவை மற்றும் கண்டறிவது கடினம். இந்த இருண்ட பொருளானது நட்சத்திரங்களைப்போல் ஒளியை அல்லது வெளியிடுவதில்லை. ஆனாலும், விஞ்ஞானிகள் அதன் ஈர்ப்பு விளைவுகளால் அது இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு பசை போல செயல்பட்டு, விண்மீன் திரள்களை (Galaxies) ஒன்றாக வைத்திருக்கிறது. அது இல்லாமல், விண்மீன் திரள்கள் சிதறிவிடும். 

மறுபுறம், இருண்ட ஆற்றல் என்பது பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை இயக்கும் ஒரு சக்தியாகும். இது விண்மீன் திரள்களை ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடன் முடுக்கி வெளியே மேலும் தள்ளுகிறது. இந்த இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் இரண்டும் கண்ணுக்கு தெரியாதவை என்றாலும், அவை பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் விதியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வானத்தில் கருப்பாக நாம் பார்ப்பது வெறும் வெற்று இடம் அல்ல. அது இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றலால் நிறைந்துள்ளது. அவை நமது கண்களுக்கு புலப்படாது. ஆக, விண்வெளியின் “கருமை” என்பது வெறுமையானது அல்ல! அடுத்தமுறை இராத்திரி வானத்தைப் பார்த்தால், நட்சத்திரங்கள் அளிக்கும் வியப்பைவிட அந்த இருள் அளிக்கும் வியப்பு அதிகமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எக்கச்சக்கமான ஒளிவீசும், ஒளியைப் பிரதிபலிக்கும், ஒளியை விழுங்கும்  நட்சத்திரங்கள், கோள்கள் என பல வகைகளில், பல கோடானு கோடி பருப்பொருள்கள் இந்த பேரண்டத்தில் உண்டு. ஆனால், அவை அனைத்தும் அண்டவெளியில் சுமார் 5%த்தை மட்டுமே ஆக்கிரமித்திருக்கின்றன. மீதி 95% வெறும் வெற்றிடம் தான். இந்த வெற்றிடம் இருளாக-கருமையாக இருக்கக்காரணம் அவற்றால் ஒளியை பிரதிபலிக்க முடியாது என்பதுதான். உண்மையில் இவை வெற்றிடமாகக் கருமையாக இருந்தாலும், இவற்றின் ஈர்ப்பு மற்றும் தள்ளும் ஆற்றல் அதீதம். எனவே, இவற்றை ஒன்றுமற்ற வெற்றிடம் என்று சொல்லாமல், கரும் பொருட்கள் என்றும், கரும் ஆற்றல் என்றும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த கருமை இல்லாமல் மற்ற எதுவும் இப்போது இருப்பதுபோல இருக்காது.

…ஆழத்தின்மேல் இருள் இருந்தது (ஆதியாகமம் 1:2)

…வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். ஆதியாகமம் 1:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *