மனிதர்களைக் கடவுள் படைத்திருந்தார் என்றால், மனிதனை ஏன் அவர் படைத்திருக்க வேண்டும்? மனிதனால் அவருக்கு என்ன பயன்? படைக்கப்பட்ட மனிதன் படைத்தவருக்கு என்ன செய்துவிடமுடியும் என்ற கேள்வி உங்களில் யாருக்காவது வந்திருக்குமானால் மகிழ்ச்சி.
இறைவன் குறைவுள்ளவராக இருந்திருப்பாரேயானால் அவர் இறைவனாக இருக்க முடியாது. அவர் தன்னில்தான் நிறைவாகவே இருந்தார். மனிதனோ, மனிதனின் சேவையோ அவருக்குத் தேவைப்படவே இல்லை ஆனால், அவர் தான் அன்புகூறவும், தன்னிடம் சுயனலமில்லா அன்பை வெளிப்படுத்தவும் மனிதனைப் படைத்தார். அதுவும் இல்லாமல் அவரால் இருந்திருக்க முடியும் என்றால், அவர் தன் விருப்பம், தன்மேல் சுயமாக முடிவெடுத்து தன்னை நேசிக்க மனிதனை உருவாக்குவதாக இருந்தது.
இதை எப்படி உணரலாமென்றால், நம் பிள்ளைகளை நாம் ஏன் பெற்றெடுக்கிறோம் என்று சிந்தித்தால் புரிந்துவிடும். கொஞ்சம் சிந்திக்கலாமே! ரிட்டேர்மெண்டுக்குப் பிறகு கஞ்சி ஊத்தவேண்டும் என்று எண்ணுவதெல்லாம் இடையில் வருவதுதான். மனிதனாகப் பிறந்த யாரும் தனியாக வாழ விரும்புவது கிடையாது. எல்லோருமே குடும்ப அமைப்பில்தான் இருக்குஅ விரும்புகிறோம். முதலில் நாம் நமக்கென்று பிள்ளைகள் இருந்தால் அவர்களை நேசிக்கவும் தன்னலமில்லாமல் நம் பிள்ளைகள் நம்மேல் அன்புகூறவேண்டும் என்று அவர்களிடம் எதிர்பார்ப்பதுவும் தான் குடும்பம் என்று ஒன்று உண்டாகக் காரணம்.
அதுமட்டுமல்லாமல், நம் பிள்ளைகள் அவர்களது சகோதர சகோதரிகளிடமும் அன்புகூறவேண்டும் என்றுதான் எந்தப் பெற்றோரும் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? மொத்ததில் அவர் நம் அனைவரையும் இணைத்து ஒரு குடும்ப உறவை நம்மிடம் தன்னுடன் இணைத்து ஏற்படுத்தவே விரும்புகிறார்.
எனவே சுருக்கமாகக் கூறினால், தான் அன்புகூறவும், அன்பு கூறப்படவும், தன்னால் படைக்கப்படாவர்கள் மற்றவர்மேல் அதே அன்பைச் செலுத்தவுமே இறைவன் மனிதனைப் படைத்தார். இறைவன், மனிதன், குடும்பம் மற்றும் சமூகம் அனைத்துமே அன்பின் அடிப்படையில் அமைந்ததே.
இதைத்தான் பைபிள் போதிக்கிறது.!
இதைச் சரியாகப் புரிந்து கொண்டால், நாம் அவருக்குச் சேவை செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிரியை செய்வதைவிட்டுவிட்டு, அவரையும், பிறரையும் நேசிக்கத்துவங்குவோம். இன்று ஒட்டுமொத்த மனுக்குலத்துக்குமான தேவையும் இதுவே!