
விடுதலைக்குத் தடை!
இரட்சிப்பில் பாவமன்னிப்பு என்பது நமக்குள் பிரதானமாக வந்திருக்கும் ஆசிர்வாதம். ஆனால், அத்துடன் அந்த ஆசிர்வாதம் நிறுவவிடுவதில்லை. மாறாக பாவத்தின் விளைவுகளால் வந்த விஷயங்களில் இருந்தும் நம்மை தேவன் தொடர்ச்சியாக பல நிலைகளில் விடுவிக்கிறார்; விடுவித்துக்கொண்டிருக்கிறார்; இன்னமும் விடுதலை செய்வார்! எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதும்பொழுது இரட்சிப்பின் ஆசிர்வாதமான இந்த விடுதலையை உணர்ந்து பாடலாக்கியிருக்கிறார்….