இறையியல்

பியூரிட்டன் போதகர்கள்

பியூரிட்டன் போதகர்கள்

பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள். பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர்,…

மகிமை…மகிமை…மகிமை

மகிமை…மகிமை…மகிமை

முன்குறிப்பு: கட்டுரையின் பின்குறிப்பை வாசித்து வந்தால் நன்றாக இருக்கும். சில வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம்; அதன் ஆழம் தெரியாவிட்டாலும். கிறிஸ்தவத்தில் அப்படி ஒரு வார்த்தை – மகிமை!. அதாவது தேவனுடைய மகிமை. இதுபற்றி  விளக்கமான போதனைகளும்  நான் அதிகம் கேட்டதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த மகிமை என்கிற வார்த்தையை விளக்குவது கடினம் என்பதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கேட்டிருப்பீர்களானால், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். 🙂 தேவ மகிமை என்பது அவருடைய பரிபூரணத்தின், அவருடைய தெய்வீக…

இப்படிக்கு பிசாசு

இப்படிக்கு பிசாசு

 ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…

தூரத்துக்கும் தேவன்

தூரத்துக்கும் தேவன்

நம்மால் ஒளியின் வேகத்தை அடையமுடியுமா? அடைவது எப்படி? அடைந்தால் என்ன ஆகும்? ஒரு கிறிஸ்தவனாக இந்த அறிவியலைக் குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தால்? பெரியப்பா மாதவன் பல வருடங்கள் முன் சொன்னது. “கடவுள் மிக வேகமானவர் என்று நினைக்கிறேன் பென்னி. அதனால்தான் அவரை நம்மால் பார்க்க முடிவதில்லை. வேகமாகச் சுற்றும் சைக்கிளின் ஸ்போக்ஸ் கம்பியை நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அதுபோலத்தான் கடவுளும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். அவருக்குக் இறை நம்பிக்கை இல்லை என்று நான் நினைத்துக் கேட்டபோது…

சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!

சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!

பூமியும் வானமண்டலங்களும் (cosmos) பிசாசின் அதிகாரத்துக்குட்பட்டவை. குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகாரம் அவனுக்கு அங்கே உண்டு. எதிரி ஆதிக்கம் செலுத்தும் நம் பகுதி (Enemy occupied Territory) எனலாம். தேவனுடைய அதிகாரத்துக்குட்பட்டு பிசாசுக்கும், அதேபோல, அவரது சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாகிய நமக்கும் சில அதிகாரங்களை தேவனே அளித்துள்ளார். அவரவர் அதிகாரத்துக்குட்பட்ட எல்லையில் அவரவருக்கு வல்லமை உண்டு. ஆனால், எல்லை தெரிந்திருப்பது அவசியம். பிசாசு தன் குணக்கேடால் எல்லை மீறுபவன். ஆனால், நமக்கோ எல்லை மீறும் வேலை இல்லை, காரணம்…

நீங்களும் இறையியலாளரே!

நீங்களும் இறையியலாளரே!

(குறிப்பு: இந்தக் கட்டுரை இறையியல் கல்லூரி செல்வது அவசியமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல) இறையியல் (Theology) என்றால் நமக்கு உடனடியாக மனதில் வருவது மதுரை அரசரடி, சென்னை குருகுல் மற்றும் பெங்களூரின் பிரபல இறையியல் கல்லூரிகளாக இருக்கக்கூடும். அதேபோல் இறையியலாளர் (Theologian) என்கிற வார்த்தையைக் கேட்டால் நினைவுக்கு வருவது இறைக்கல்வி பெற்ற பாஸ்டர்கள், குருமார்கள் தான். இது சரியே என்றாலும், இறைக்கல்வியை கல்லூரியில் சென்றுதான் படித்தாகவேண்டும் என்றும், அப்படிப் படித்தவர்கள்தான் இறையியலாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிருப்பது சரியல்ல. நாம்…

பாவமும் பரிசுத்தமும்

பாவமும் பரிசுத்தமும்

கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில்…

திரித்துவம் அல்லது திரியேகத்துவம்

திரித்துவம் அல்லது திரியேகத்துவம்

குறிப்பு: கட்டுரையின் நோக்கம், ஏற்கனவே திரித்துவத்தை ஆராய்ந்து அறிந்தவர்களுக்கு இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்க ஒரு சிறு உதவியாக இருப்பது மட்டுமே. கொஞ்சம் கவனத்துடன் வாசித்தால் சில புதுப் பரிமாணங்களில் நீங்களும் அவரைக் குறித்துச் சிந்திக்கலாம்! கிறிஸ்தவத்தில் திரும்பத் திரும்பப் போதிக்கப்படுவதும் விசுவாசிக்கப்படுவதுமான உபதேசம் திரித்துவம் அல்லது திரியேகத்துவம். இறைவன் மூவராக இருக்கும் ஒருவர் என்பதே திரித்துவம். இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும். ஆனால், அது இயல்பானது. காரணம் எந்த நேரத்திலும் மனிதராக இருக்கும்…

தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்

தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] …[பாகம் 5] ஆண்டவர் பூமியில் இருந்தகாலங்களில் கிருபையைப் போதிக்கவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். தேபோல் ஆச்சரியமானவிதமாக அவர் விளக்கிச் சொல்லாத மற்றொரு விஷயம் கிறிஸ்தவத்தின் அடிநாதமான ‘சத்தியம்’! அதை அவர் ஒரு உபதேசமாகச் சொல்லி விளக்கவில்லை. அதற்குக் காரணம் சீடர்கள் தாங்கமாட்டார்கள் என்ற காரணமாகத்தான் இருக்கமுடியும்.  ஆனாலும், அவரது குரலை வீதிகளில் கேட்டவர்கள் அவர் போதிப்பது சத்தியம் என்று சில பரிசேயர்கள் அனுப்பிய சில ஏரோதியரான வேவுக்கார்…

கிருபை சத்தியம் கிறிஸ்து

கிருபை சத்தியம் கிறிஸ்து

கிறிஸ்து பூமியில் வந்தபோது கிருபையைக் குறித்துப் போதிக்கவில்லை. காரணம் அவர் மனு உருவில் வெளிப்பட்டதே கிருபையாகத்தான். அவர் கிருபையாக இருந்தார். (லூக்கா 18:13).  சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கு அவர் பதில் சொல்லவில்லை. சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவர் அவர். நானே சத்தியம் என்றவர்.  கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம்…

  • 1
  • 2