ஏரோது: ஒரு கொலைகார வம்சத்தின் வரலாறு
புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் ஏறக்குறைய ஐம்பது முறை வருகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்: இது ஒரே நபரைக் குறிப்பதல்ல! ரோமானியப் பேரரசின் தயவால் யூதேயாவை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயரே ‘ஏரோது’. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கி.மு. 40 வாக்கில் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இவர்கள் யார்? ஆதிப் பிதாவாகிய யாக்கோபின் வழித்தோன்றல்கள் அல்ல; அவருடைய சகோதரன் ஏசாவின் வம்சத்தார் (ஏதோமியர்கள்)….