பொதுவான சிந்தனைகள்

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்

ஏரோதுக்கள்

ஏரோதுக்கள்

புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் கிட்டத்தட்ட ஐம்பது முறை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்தப் பெயர் ஏரோது என்கிற ஒரு நபரை அல்ல –  பல்வேறு நபர்களைக் குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கிமு 40 இல் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இந்த ஏரோதுக்கள் ஏசாவின் வழித்தோன்றல்கள் (ஏதோமியர்கள்!). யாக்கோபின் வம்சத்தினர் அல்ல, என்றபோதிலும் அவர்களின் முன்னோர்கள் யூத மதத்திற்கு மாறியிருந்தனர். புதிய ஏற்பாடு…

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

‘சிங்கங்கள் புத்தகம் எழுதாத வரை, வேட்டைக்காரன் தன்னைக் குறித்துதான் பெருமையாக எழுதிக் கொண்டிருப்பான்’ என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு. எழுத்தாளர்கள் அனைவருக்குமே உள்ளதை உள்ளபடி எழுதுவது என்பது இயலாது. ஸ்டைல் என்கிற பேரிலாவது தங்களை எழுதுவதில் கலந்துகொண்டிருப்பார்கள். வரலாறும் அப்படித்தான்.  அக்கால மன்னர்களைத் தாண்டி வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை  மட்டும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதை வரலாறு படிப்பவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் எல்லாம் அந்த வகையறாக்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் சரியாகத்தான்…

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு

சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர். அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை. சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்  ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை…

தாங்க மாட்டீர்கள் – பாகம் 5 – சபை

தாங்க மாட்டீர்கள் – பாகம் 5 – சபை

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] கர்த்தராகிய கிறிஸ்து ஊழியத்தில் முதலாவது செய்த வேலை தனக்கென பன்னிரெண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்ததுதான். பொதுவாகவே தேர்ந்தெடுப்பு என்பது வித்தியாசமானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது என்பவர்களைத் தேவன் தெரிந்துகொண்டதன் பின்னணியைக் கவனித்தீர்கள் என்றால், அவர்களுக்கென எந்த விசேஷமான திறமைகள் இருந்ததாகத் தெரியவில்லை என்பது விளங்கும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் தெரிந்துகொண்டதும் இப்படித்தான். அவர்கள் பெரிய இனமாக இருந்திருக்கவில்லை. மிகவும் கொஞ்ச ஜனங்கள் என்று…

கேள்வி: புதிய ஏற்பாடு முதலாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்படவில்லை?

கேள்வி: புதிய ஏற்பாடு முதலாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்படவில்லை?

ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ள 73 நூல்கள், புராட்டஸ்டண்டு வேதாகமத்தில் 66 என அனைத்தும் ஒன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவையே. புதிய ஏற்பாட்டின் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷம் கிறிஸ்துவின் சீடரான அப்போஸ்தலர் யோவானால் கிபி 68ல் அல்லது 96ல் எழுதப்பட்டது. (68 என்றால் யோவான் எழுதிய சுவிசேஷம் கடைசி நூலாக இருக்கக்கூடும்). புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்துமே கிறிஸ்துவுடன் இருந்தவர்களால் எழுதப்பட்டது. இதில் மாற்கு பேதுருவின் சீடர், லூக்கா பவுலின் நண்பர். பவுல் கிறிஸ்துவால் நேரடியாகத்…

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 .  ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள் இவை. “வேதமே வெளிச்சம்”! ஆனால் அறிந்தோ அறியாமலோ அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்கள்தான். இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே. 1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும்…

சிலுவைப் போர் சரியா?

சிலுவைப் போர் சரியா?

கேள்வி: கிறிஸ்தவத்தின் பேரால் உலகில் நடைபெற்ற படுகொலைகளைப் (உம்: சிலுவைப் போர்) பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: கிறிஸ்தவத்தின் பெயரால் யார்வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். “கிறிஸ்து”வின் பெயரிலும்கூட தாங்கள் விரும்பியதையெல்லாம் வருந்திச் செய்யலாம். அது போராக இருந்தாலும் சரி. ஊழியம் என்று நாம் நினைத்துக் கொண்டு செய்வதாயினும் சரி!. ஆனால், எதைச் செய்தாலும் கிறிஸ்துவுக்கு மகிமையைச் (அதாவது அவருக்குப் புகழை) சேர்ப்பதுவும், அதுவும் அவர் காட்டிய வழியில் அவர் விரும்பும் வண்ணமாகச் செய்வதுமே கிறிஸ்தவனின் செயல்பாடாக…

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல்

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல்

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல் (Dark Matter and Dark Energy) வானத்தை அண்ணாந்து பார்த்தால் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் சில கோள்கள், சந்திரன் என்று தெரிகிறதல்லா? அதைவிட்டு மீதி எல்லாம் இருள் மயம். இந்த இருளான பகுதிகள் எல்லாம் வெற்றிடங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களால், அது தவறு. அவைகள் எல்லாம் நிறம் இல்லாத பருப் பொருள்கள். கண்ணால் காணப்படமுடியாததை ஆனால், பிரமாண்டமாக ஆற்றலைத் தேக்கிவைத்திருப்பவை. எவ்வளவு ஆற்றல்? கேலக்ஸிகள் எனப்படும் நட்சத்திரக்கூட்டங்களை தள்ளிக்கொண்டு போகும் அளவு அல்லது…

போதக ஐக்கியம்

போதக ஐக்கியம்

“பிறரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள மனமற்ற போதககர்கள் மிகவும் அபாயமான ஆசாமிகள்” என்று பல வருடங்கள் முன் எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ( பாஸ். மேத்யூஸ்) ஒரு முறை சொன்னார். அப்பொல்லோவைப் போல வேதாகமங்களில் வல்லவர்களாகவும், ஆவியில் அனலுள்ளவர்களாகவும், திட்டமாய் போதகம் பண்ணுபவர்களாக இருந்தாலும், நீங்களும், அதிக திட்டமாய் இறைவழியை விவரிக்கும் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போன்ற மக்களை ஐக்கியத்தில் – உங்கள் வட்டத்தில் – வைத்திருப்பது அவசியம். உங்கள் உபதேசங்கள் ஆவியானவரால்தான் உறுதி செய்யப்படுகின்றன என்றாலும் ஐக்கியம்…

உணர்ச்சிப் பொங்கல்!

உணர்ச்சிப் பொங்கல்!

ஒரு நிகழ்வு குறித்து நாம் பெறும் அறிதல், மற்றும் புரிதலே உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதமே உணர்ச்சி. உணர்வு – Understanding after knowing.உணர்ச்சி – Feeling. தேவன் என்னை இரட்சித்திருக்கிறார் என்பது அறிதலால் வருவது உணர்வு. அதைச் சார்ந்து அவருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும் உணர்ச்சி சரியானது. சும்மா பாடுதல், ஆடுதல், கைகளை உயர்த்தி வெறுமனே சத்தமிடல், ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசம் அடைந்து சத்தமிடல், கண்ணீர் சொறிதல், புல்லரித்தல், அந்நியபாஷையில் பேசுதல் – இதற்கும்…