பொதுவான சிந்தனைகள்

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்

பில்கிரிம்ஸ் ப்ரொக்ரெஸ் – மோட்சப் பிரயாணி

அனேகமாக 35 வருடங்களுக்குப் பின் இன்னூலை மீண்டும் வாசிக்கிறேன். சின்ன வித்தியாசம். முன்பு தமிழில்; இப்பொழுது ஆங்கிலத்தில். காரணம் முழுமையான தமிழ்ப்பதிப்பு என்னிடம் இல்லை. ஏராளமாக கதைப் புத்தகங்கள், காமிக்ஸ்கள் வாசித்து வளர்ந்த எனக்கு “கிறிஸ்தியானின்” வாழ்க்கைப்பயணம் மிகவும் பிடித்துப் போனது. இது ஒரு கதைப்புத்தகம். ஆனால், இந்தக் கதையில் நாம் தான் நாயகர்கள். நாம் ஒவ்வொருவரும்தான் அந்தக் கிறிஸ்தியான். எனவே வாசிக்கத் துவங்கிய 15 நிமிடங்களில் நீங்களும் கிறிஸ்தியானாக மாறிவிடுவீர்கள். இதன் தலைப்பிலேயே புரொக்ரஸ் (progress)…

பியூரிட்டன் போதகர்கள்

பியூரிட்டன் போதகர்கள்

பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள். பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர்,…

புதிய துவக்கங்கள்

புதிய துவக்கங்கள்

தோல்வி மற்றும் தோல்வியில் ஏற்பட்ட மனச்சோர்வில், தங்கள் வாழ்க்கை இனி முடிந்துவிட்டது என்று நினைப்பவர்கள் ஏராளம். இனி வாழ்க்கையை அழகாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இப்போதே என் வாழ்வில் எல்லாம் தாமதமாகிவிட்டது என்று நினைப்பதால் இனி புதிய வாய்ப்புகளைக் குறித்து சிந்திப்பதே கடினமாக ஆகிவிடுகிறது. சில விஷயங்கள் விரும்பத்தாக சூழலில் சென்று விட்டதால், இனி சரியான நிலைக்கு நான் வருவதே இயலாது என்ற நினைவுகளின் அழுத்தம் அதிகமாகி விடுகிறது. அது தலைக்கு மிஞ்சிய சூழலாகவே ஆகிவிடுகிறது. ஆனால் நாம்…

பயன்படுவதே பாக்கியம்

பயன்படுவதே பாக்கியம்

“சார் தந்தி!” என்று வாசலில் குரல்கேட்டால் வீட்டுக்குள் அனைவருக்கும் பெரும்பதற்றம் தொற்றும். எழுபது எண்பதுகளின் இறுதிவரை அதிவேகத் தகவல்களுக்குத் தந்திதான் எளிய வழி. உங்களில் எத்தனை பேருக்கு இதில் அனுபவம் உண்டு என்று தெரியாது. பத்து வரி அனுப்ப 30-40 ரூபாய் ஆகும் என்பதால், மிகக் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்தோம். டெலிஃபோன் பயன்பாடு அதிகரிக்கும் வரை தந்திதான் சாமனியருக்குக் கிடைத்த வழி. பொல்லது மட்டுமல்லாமல், நல்லதும் தந்திவழியாகத் தான் சென்றது. “YOU ARE APPOINTED….

சி. எஸ். லூயிஸ் 

சி. எஸ். லூயிஸ் 

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர்  CS Lewis என்று சொன்னால் பலர் மறுக்கப்போவதில்லை. அவரை வாசிப்பது கடினம் என்பது முதல் புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றியது. அதற்குக் காரணம் அவர் அல்ல. அவரது சில முக்கியமான புத்தகங்கள் அவரது உரைகளில் இருந்து எழுத்துக்களாகத் தொகுக்கப்பட்டவை. அக்கால பிரிட்டிஷ் அறிஞர்களின் ஆங்கிலம் என்பதால் அதை அப்படியே எழுதிவிட்டார்கள். அவரது கருத்துக்களில் கைவைத்துவிடக்கூடாது என்பதற்காகவே புத்தகங்களை எளிமைப்படுத்தும் முயற்சியை எவரும் செய்யவில்லை.  நாத்திகத்தில் இருந்து ஆத்திகனாக மாறிய கிளைவ்…

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை

சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில்  கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer)  . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர்.  தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர்.  வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்

டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்

முன்குறிப்பு: இதுவரை ஒருமுறைகூடக் கேள்விப்பட்டிராத ஜனங்களுக்கான நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு வந்த ஒரு சந்தேகம். அது, மேலும் அறிய சில வருடங்கள் முன்னர் ஒரு தேடலைத் துவக்கியது. உதாரணமாக, எவரும் நுழைய இயலாத அமேஸான் காடுகளுக்குள் வசிக்கும் மக்கள் இயேசு என்கிற பெயரைகூடக் கேள்விப்படாதிருந்தால் அவர்கள் நித்திய வாழ்வு அதோகதிதானா என்கிற கேள்வி!. எனவே, சிலவருடங்களுக்கு முன்னர் அதை அறிந்து ஒரு கட்டுரையாக எழுதவும் செய்தேன். (ஆனால், அதை இங்கு பதிவிடவில்லை). ஆனால், அப்போதைய…

கிறிஸ்தவம் தந்த கொடை

கிறிஸ்தவம் தந்த கொடை

ஒருவேளை பூமிக்கு வராமல் இருந்திருந்தால்? அவர் நமக்காக மரிக்காமல் இருந்திருந்தால்? தன்னால் இரட்சிப்பட்டவர்களாக தன் சரீரமான சபையை பூமியில் அவர் ஸ்தாபிக்காமல் இருந்திருந்தால்? உலகமெங்கும் அவரது சீடர்கள் பரம்பி இன்றுவரை அவரது அன்பின் நீட்சியாகச் செயல்படாமல் இருந்திருப்பார்களானால் இன்று எப்படி இருந்திருப்போம்? எல்லா வசதிகளையும் அருகருகே கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நமக்கு, மொபைலிலும், போக்குவரத்திலும், இணையத்திலும் இனி வரும் காலங்களில் ஆர்டிஃபிஷ்யல் இண்டலிஜென்சிலும் இன்னமும் கணக்கிலடங்கா வசதிகளைப் பெற்ற ஒரு சமுதாயத்தில் இருக்கும் நாம், ஒரு…

தூங்கும் மிருகம்?

தூங்கும் மிருகம்?

ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்று சொல்வார்கள். அதாவது, நமக்குள் இருக்கும் நன்மையான எண்ணங்களுக்கும், தீமையான எண்ணங்களுக்கும் உருவமும் உயிரும் அளித்தால் நமக்குள் ஒரு நல்ல மனிதனும் தீய மிருகமுமாக நமக்குள்ளேயே இருவர் உண்டு – என்கிற சிந்தனை உலகத்தில் இருந்து வரும் ஒரு சிந்தனை.!  சிலருக்கு நல்லவன் வெளியே உலாவிக்கொண்டிருப்பான் – அவர்கள் நல்லவர்கள். சிலருக்கு தீயவன் வெளியே. அவர்கள் மோசமான மிருகங்கள். பெரும்பாலும் நல்லவர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை…

ஒரு வேதவாசிப்பு டெக்னிக்

ஒரு வேதவாசிப்பு டெக்னிக்

“பைபிளைத் திறந்த உடனேயே தூக்கம் கண்ணக்கட்டுது பிரதர்” என்பவரா நீங்கள்? வேதத்தை மனதில் இருத்த ஆசை என்றாலும், வாசித்த பல மறந்து விடுகிறது என்கிற குறை அழுத்துகிறதா? அதற்குத்தான் இந்த ஒரு சிறு டெக்னிக்கைப் பயன்படுத்தும் ஆலோசனைக்கட்டுரை! கிறிஸ்தவர்களுக்கு, வேதத்தை தியானம் செய்தல் என்பது வெறும் அறிவுசார் பயிற்சி அல்ல; அது தேவனுடனான நம் உறவை ஆழப்படுத்தவும், அன்றாட வாழ்வில் இறை ஞானத்தைப் பெறவும் அவசியமான வழியாகும். இருப்பினும், சிக்கலான உபதேசங்களைப் புரிந்துகொள்வது நமக்குச் சவாலானதாக இருக்கலாம்….