
வயதும் அனுபங்களும் மட்டும் ஒரு மனிதனை நல்லவனாக வாழ வைத்துவிடும் என்றால் அறுபது எழுபதைத் தாண்டினால் அனைவரும் நல்லவர்களாகவும், மிகவும் நல்லவர்களாகவும் மாறி இருக்கவேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது நாம் அறிந்த உண்மை.
வேதம் நமக்குப் போதிப்பது நல்லவர்களாக வாழ்வதைக் குறித்த அல்ல. மாறாக இவ்வுலகில் இரட்சிப்பையும் நித்தியமாக தேவனுடன் வாழும் சிலாக்கியத்தை அருளும் தேவ கிருபையையும். அதை நாம் அனுபவங்கள் வாயிலாககப் பெறுவதில்லை. கிறிஸ்துவால் பெறுகிறோம்.
இந்தக் கிருபை நம்மை நல்லவர்களாக ஆக்க அல்ல, தேவ வல்லமை பெற்றவர்களாக வாழ உதவுகிறது. இந்தக் கிருபைதான் அதிக அனுபவங்கள் இல்லாத சூழலிலும் கூட, வாழ்வின் சில கடினமான கட்டங்களை மேற்கொள்ள உதவுகிறது. அதற்கு வயது ஒரு தடையல்ல. வாலிபராக இருந்தாலும் கிறிஸ்துவுக்காக வைராக்கியம் கொண்டு வாழ்வது தேவ தயவால்தான்.
அனுபவங்கள் நல்லதே. வயது ஆக ஆக வரும் முதிர்ச்சி அவசியமே. ஆனால், ஒரு தாவீதோ, சாமுவேலோ தேவனுக்காக எழும்பியது அவர்கள் அனுபவங்களைப் பெற்றபின் அல்ல. உங்கள் வாலிபர் கர்த்தரால் போதிக்கப்பட்டிருந்தால், பாக்கியங்களையும் நன்மைகளையும் பெறுவதே இறைச் சித்தம்.