
கிறிஸ்து பூமியில் வந்தபோது கிருபையைக் குறித்துப் போதிக்கவில்லை. காரணம் அவர் மனு உருவில் வெளிப்பட்டதே கிருபையாகத்தான். அவர் கிருபையாக இருந்தார். (லூக்கா 18:13).
சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கு அவர் பதில் சொல்லவில்லை. சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவர் அவர். நானே சத்தியம் என்றவர்.
கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம் பண்ணினார் (யோவான் 1:14).
கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்தித்தது கிறிஸ்துவில்தான் (சங்கீதம் 85:10). அவை இரண்டும் இன்று நமக்கு முன்பாக கிறிஸ்துவாக (சங்கீதம் 89:14). அவை நம்மைவிட்டு விலகாமல் கிறிஸ்துவாக. ( நீதிமொழிகள் 3:3)!
சத்தியத்தால் விடுதலை பெற்றோம். அவரிடம் ஒப்புவிக்கப்பட்டு கிருபையால் நிலை நிற்கிறோம்.