
ஒரு புது ஊருக்கு மாறி செல்பவர்கள் அல்லது ஏரியா மாறிச் செல்பவர்கள், “ நல்ல ஏரியாவுல வீடு பாக்கணும், சுத்தி இருக்கிற ஆள்கள் வீடுகள் நல்லா இருக்கணும், சொந்த பந்தங்கள் இருக்குற ஏரியாண்ணா சிறப்பு!” என்றெல்லாம் பார்த்துதான் வீடு குடிபுகுவது வழக்கம்.
அதுவும் வீடு இடம் வாங்கவேண்டும் என்றால் சாதிசனமெல்லாம் பார்க்காமல் ஒரு ஏரியாவுக்குள் செல்லமாட்டர். ஏழைகள் குடிசைகள் வாழும் பகுதி என்றால், அந்த ஏரியாவே வேண்டாம் என்றுதான் ஒதுங்குபவர்கள் தாம் நாம் அனைவரும்.
ஆனால், இதற்கு நேர்மாறானதைச் செய்தார் நம் தேவன். தம்மால் உண்டாக்கப்பட்ட மனிதர்கள். அதுவும், பாவத்தில் உளன்றுகொண்டிருப்பவர்கள். அவரது பரிசுத்தத்திற்குச் சம்பந்தமில்லாதவர்கள்.
அவர் அப்படிப்பட்ட நம் ஏரியாவில், நம் நடுவில் பிறக்கவும், வாழவும், அவர்கள் கையால் மரிக்கவும், மட்டுமல்லாமல், அவர்களோடு நித்திய உறவிலும் இருக்க வந்தவர். மெய்யான comfort zone-ல் எக்காலமும் இருந்தவர். எந்த comfortம் இல்லாத நம்மிடம் வந்தார்.
நாம் வகுத்து வைத்திருக்கும் தரம், தகுதி, இனம், மொழி, அந்தஸ்து, சாதி என்று எதுவும் பாராத உன்னதப் பிறப்பாக வந்தவர், உன்னதத்திலே அவரோடு அமரவும் நம்மைத் தகுதிப்படுத்துகிறவர். அவர் ஏரியா மாறி வந்ததே நம் ஏற்றத்திற்கே.
அந்த இயேசுவின் உன்னத நாமத்தில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
Benny Alexander, 2024.