
ஒரு நிகழ்வு குறித்து நாம் பெறும் அறிதல், மற்றும் புரிதலே உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதமே உணர்ச்சி.
உணர்வு – Understanding after knowing.
உணர்ச்சி – Feeling.
தேவன் என்னை இரட்சித்திருக்கிறார் என்பது அறிதலால் வருவது உணர்வு. அதைச் சார்ந்து அவருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும் உணர்ச்சி சரியானது.
சும்மா பாடுதல், ஆடுதல், கைகளை உயர்த்தி வெறுமனே சத்தமிடல், ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசம் அடைந்து சத்தமிடல், கண்ணீர் சொறிதல், புல்லரித்தல், அந்நியபாஷையில் பேசுதல் – இதற்கும் வேதம் சொல்லும் ஆராதனைக்கும் சம்பந்தமில்லை. வெறும் ஃபீலிங்க் (feeling) வீண்! இதில் நன்றி உணர்வுகூட இங்கு அவரை அறிதலால் வருவதுதான் முக்கியம். வெறுமனே கார் தந்தார், கடன் அடைத்தார் என்பவைகளை மட்டும் நினைத்து வந்த நன்றி உணர்வு என்றால், அந்த உணர்ச்சியும் ஆராதனையாகிவிடாது.
புத்தியுள்ள ஆராதனை வெறும் உணர்ச்சியால் செய்யப்படுவதல்ல. நீங்கள் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் ஆராதிக்கும் Reserved நபராக கூச்ச சுபாவம் உடையவராக இருந்தால்கூடப் பிரச்சனை இல்லை.ஆனால், வெறும் உணர்ச்சியை மட்டும் பொங்கவிட்டுக் காட்டும் இறையறிவு இல்லாத, அவருடன் உறவு ஏதும் கொள்ளாத, எதற்கும் கீழ்படியாமல் இருப்பவர் என்றால் அதெல்லாம் வீண். அப்படிப்பட்ட Open ஆளாக, இருந்து ஒரு பயனும் இல்லை!
உணர்ச்சிவசத்தில் கிடைக்கும் மனநிறைவு அன்று மதியம் சாப்பாட்டுக்கு மேல் வரைகூடத் தாங்காது. அடுத்த நாள் வறட்சிதான். ஆனால், அறிந்த உணர்வினால் இருக்கும் நெஞ்சம் ஆராதனையை உள்ளத்தில் நடத்திக்கொண்டே இருக்கும்.
உணர்வு – உணர்ச்சி என்கிற இரண்டுக்குமே ஆராதனையில் இடம் இருந்தாலும், அது அறிதலின் அடிப்படையிலானது.
- Benny Alexander