இரத்தம் ஏன்? பலி ஏன்?

இயேசு சிலுவையில் தொங்கி மரித்தார். மரணம் கொடூரமாக, இரத்தமும் நீருமாக அனேகமாய் உடலில் இருந்த அனைத்து இரத்தமும் (தோராயமாக ஐந்து லிட்டர்) சிந்த மரித்தார். இப்படிப் பட்ட மரணம் எல்லோருக்கும் நடப்பதில்லை. அரிதினும் அரிதான ஒரு மரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் ஏன் இப்படிப்பட்ட ஒரு மரணத்தை அதுவும் இரத்தத்தை மையமாகக் கொண்ட – இரத்தமயமான – ஒரு மரணத்தைத் ஏன் தேர்ந்தெடுத்திருக் வேண்டும்? அதில், இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன? அவர் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவரும் அவசியம் சிந்திக்கவேண்டிய ஒன்று.

அப்படிச் சிந்திக்கிற ஓவ்வொருவரும் இரத்தத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள ஆழமானதாக இருப்பினும், புரிந்துகொள்ளத்தக்க சில உண்மைகளை விளங்கிக் கொண்டால் இரத்தம் சிந்துதலால் உண்டான பாவ மன்னிப்பின் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

முதலாவதாக, இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்கிறது வேதாகமம் (எபிரேயர் 9:22). இந்த முறையை ஏற்படுத்தியவர் தேவன். இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும் என்றால் பாவம் மிகவும் ‘சீரியஸான விஷயம்’ என்பதுதான். பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது வேதம், மனிதன் பாவம் செய்த நாளில் சாகவேண்டும் என்ற முறையை தேவனே ஏற்படுத்தினார். காரணம் பாவத்தின் வீரியம் அப்படிப்பட்டது. தேவன் தன் சாயலில் உண்டாக்கிய மனிதனிடம், அவரிடம் இல்லவே இல்லாத பாவம் என்கிற ஒன்று நுழையும்போது விஷயம் மிகவும் மோசமானதாகிவிடுகிறது. மனிதனிடம் இருக்கும் தன் சாயலில் கறைபடிபதை அவரால் நிச்சயம் விரும்ப இயலாது. இதுவே, பாவம் நுழைந்த நாளில் இருந்து, நம்மை இறைக்கோபாக்கினைக்கு உட்படுத்திவிடுகிறது. ஆனாலும் – பாவத்தைப் பாராத சுத்தக் கண்ணரான தேவன், அன்பும் மிகுந்தவர். எனவே, திரும்ப அந்தச் சாயலை அடைய மனிதனுக்கு ஒரே ஒரு மாபெரும் வாய்ப்பாக தன் பிள்ளை இயேசுவைப் பலியாகத் தந்தார். அந்த அன்பு மூடுகின்ற பாவத்தைத் (1 பேதுரு 4:8) தன் ஒரே குமாரனையே பலியாக, அதுவும் இரத்த பலியாகத் தரும் அளவு மிகக் கொடுமையான விஷயமாக தேவன் அதைப் பார்க்கிறார் என்பது இங்கே நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ளவேண்டியெ ஒன்று.

இந்தப் பாவத்தை முதன்முதலில் துவக்கியவன் மனிதன் அல்லன். முதல் மனிதரான ஆதாம் காலத்திற்கு முன்னரே, அதாவது உலக உண்டாகும் முன்னரே, அதே பாவத்தின் விளைவாக ஒரு பெரும்கூட்டம் தூதர்கள் தெய்வத்திற்கு எதிராகச் செயல்பட்டதால், இறைவனால தள்ளப்பட்டார்கள். அன்று துவங்கி இன்றுவரை பாவம் மிகவும் கடுமையான விஷயமாக இருப்பதற்குக் காரணம் அவற்றைச் செய்கிற எவரும் ஒரு மெய் தெய்வத்திற்கு எதிராகச் செய்கிறார்கள் என்பதுதான். எந்தப் பாவமும் எப்போதும் தேவனுக்கு எதிரானதே! அவரிடம் பாவமே இல்லை. பாவத்தைப் பாராத சுத்தக் கண்ணர் அவர். எனவே, தனக்குத் தானே செய்துகொண்டாலும் சரி, சக மனிதனுக்கு எதிராகச் செய்தாலும் சரி, தேவன் தன் சாயலாக இருக்கப் படைக்கப்பட்ட மனிதன் செய்யும் குற்றத்தைத் தனக்கு எதிராகவே பார்க்கிறார். அதற்கான உரிமை அவருக்கு உண்டு.

ஆனால், பாவத்தைச் செய்த மனிதனை உடனடியாக நரகத்தில் தூக்கிப்போட்டுவிடுவதில்லை இறைவன். அவர் நீதியான தெய்வம் என்பதால், பாவத்தைப் போக்கும் ஒரு அமைப்பையும் முறையாக வைத்துள்ளார். அதில், இந்த பாவத்தைச் செய்யும் மனிதருக்கு, தூதருக்குக்கூட அருளப்படாத ஒரு வாய்ப்பாக பலி என்கிற பரிகார முறையை மன்னிப்புக்கு ஏதுவாக தேவன் ஏற்படுத்தினார். கொஞ்சம் சிந்தித்தால், இது யூத கிறிஸ்தவ வேதத்தில் என்றில்லாமல், ஆதாம் வழித்தோன்றல்களான, எல்லா மதத்தினரிடமுமே பலி என்கிற முறை இருப்பதைக் காணலாம். பாவம், பரிகாரம், (இரத்த) பலி, குற்றம் இல்லா இரத்தம் சிந்தப்படல், மன்னிப்புக் கோரல், மன்னிக்கப்படுதல், சமாதானம் பொருந்துதல் என்கிற முறைகள் எல்லா மனிதனின் இருதயத்திலும் எழுதப்பட்டவைகளே. கடவுள் இல்லை என்று மறுப்பவர்கள் கூட குற்றம், தண்டனை, மன்னிப்பு என்கிற முறைகளை வேண்டாம் என்று சொல்வதில்லை. காரணம், இவை எல்லா மனிதனின் மனதிலும் எப்போதும் சரியான முறையாக இருப்பதுதான். இன்று தன்னை நாகரிகமடைந்தவனாக காட்டிக்கொள்ள முயலும் ‘அறிவியல் சந்ததிக்கு’ப் பலி என்பது வித்தியாசமாகத் தோன்றினாலும், குற்றத்திற்கான தண்டனை என்கிற முறை எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதும் இதன் அடிப்படையில்தான்.

ஆக, பாவ நிவாரணம், மன்னிப்பு என்பதற்கு ஒரு விலை இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அனைவரும் ஒத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். கொடுக்கப்படும் அந்த விலைதான், ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் நீதி. மரண தண்டனை வேண்டாம் என்கிறவர்கள்கூட, தண்டனையே வேண்டாம் ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடுவதில்லை. ஒரு குற்றத்திற்குத் தண்டனை மட்டுமே சரி என்றும் ஒட்டு மொத்தமாக முடிவு செய்ய முடியாமல் இருக்கக்காரணம், எல்லா மனிதருமே மன்னிப்பை விரும்புவதுதான். மற்றவர்கள் செய்யும் தவறுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கூட தானும் குற்றவாளியானால் அதேபோன்று தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது அரிது. மற்றவரை மன்னிக்க இயலாத மனிதனும் தான் மன்னிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவான்! அதாவது, எல்லோருமே ஏதோ ஒருவகையில் நீதியையும் விரும்புகின்றனர்.

நீதி கிடைக்க வேண்டுமானால், குற்றத்தின் விலையாக ஒன்றைக் கொடுத்து சரி செய்ய முடியாத அளவு மிகப் பிரமாண்டமாக இருந்தாலும், அதற்கும் ஒருவாறு ஒரு விலை நிர்ணயித்துத்தான் ஆக வேண்டும். அதுவும், தண்டனை ஒன்று குற்றத்திற்கு விலையாக வைக்கப்படும் என்றால், அதுவும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாக இருக்கவேண்டும். அப்படியானால், பாவத்தின் வீரியமான நிலையில் இருக்கும் மனிதனுக்கு மன்னிப்பைத் தந்து, அதேசமயம் நீதியும் தவறாமக் இருக்க, அதற்கு இணையான ஒன்றைக் கொடுத்தால்தான் அந்தப பரிகாரமும் நியாயமானதாக, ஏற்றுக் கொள்ளப்படும். இதை நன்றாக வாசித்து மனதில் இறுத்திக் கொண்டீர்களென்றால், இரத்தம் ஏன் சிந்தப்பட வேண்டும் என்பதைச் சிந்திக்கலாம்.

நம் அனைவருக்கும் முக்கியமானது இரத்தம். இரத்தம் வெளியேறினால் மரணம் உறுதி. இந்த இரத்தமே நம் உடலில் பிரமாண்டமான அல்லது அதிமுக்கியமான விஷயம்! மேலும் பாவசுபாவம் வேறு இந்த இரத்தத்தில்தான் பொதிந்திருக்கிறது. ஏனென்றால் மனிதனின் குணாதிசயமே DNA எனப்படும் அமிலத்தின் இரத்தத்தின் வெள்ளை அணுக்களில்தான் இருக்கிறது. அது சந்ததி சந்ததியாகக் கடத்தப்படுவதும் இந்த DNA மூலமாகத்தான். அதாவது, பாவம் செய்யும் இயல்பு சந்ததி சந்ததியாக இரத்தம் வழியாகத்தான் ஆதாமில் இருந்து இன்றுவரை அனைவருக்கும் கடத்தப்படுகிறது. பாவச் செயல்கள் புரியத் துவங்குமுன்பே, கருவிலேயே பாவசுபாவம் ஒரு விதையாக DNAக்களில் பிணைந்திருக்கிறது.

ஆக இரத்தம் அதிதீவிர முக்கியம் படைத்தது என்பதில் சந்தேகமில்லை. மனிதன் உயிருடன் இருக்க இரத்தம் தேவை. ஒரு கைகால், இல்லாத மனிதனைக் கூடக் காப்பாற்றிவிடலாம். மூளைச்சாவு அடைந்தவர்கூட ஆண்டுக்கணக்கில் கோமாவிலாவது உயிருடன் இருக்கலாம். ஆனால், இரத்தம் வெளியேறிவரோ, அல்லது, இரத்தத்தை உடலெங்கும் கொண்டு செல்லும் இருதயம் நின்றுவிட்டாலோ மரணம் உறுதி. பிளேடு வெட்டினால் கூடத் துடித்துப் போய், உடனடியாக பதற்றம் அடைந்து இரத்த வெளியேற்றத்தை நிறுத்துகிறோமா? அது.. இதனால்தான்!

மனிதனின் இயல்புகள் இரத்தத்தில்தான் இருக்கின்றன என்பதால் பாவநிலையும் இந்த ஐந்து லிட்டர் இரத்தத்துக்குள் தான் சுற்றிவருகிறன்றன. அப்படியானால், பாவத்தை வெளியேற்ற, அல்லது பாவத்தில் இருந்து விடுதலைபெற அந்த இரத்தத்தை வெளியேற்றவேண்டியதுதான். ஆனால், இரத்தம் வெளியேறினால், பாவம் வெளியேறுவதைவிட வேகமாக மரணம் வந்துவிடும். ஆக, இப்படி பாவத்தைப் போக்க நாம் மரிக்கவேண்

மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. ஆதியாகமம் 9:6

லேவியராகமம் 17:14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்.

அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார். (எபிரேயர் 9:26)

மத்தேயு 26:28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

எபிரெயர் 10:4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *