அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

உத்திரம் உங்கள் கண்களிலேயே இருந்ததென்றால் அது இயலாது. ஆகாது. அதையே இயேசு சொன்னார். முதலில் தன்னைச் சீர்செய்த அவசியம் நிச்சயம் தேவை.

ஆனால், நியாயமே தீர்க்கக்கூடாது; குற்றப்படுத்தவே கூடாது என்பது இதற்குப் பொருள் அல்ல!

“என் கண்களில் ஒரு பெரிய உத்திரமே இருந்ததப்பா, நான் அதையே எடுத்துப்போட என்னுள் வாழும் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார்; உன்னில் இருக்கும் துரும்ப அவருக்கு எம்மாத்திரம். நீ அதை உணர்ந்தால், அதை எடுத்துப்போடவது எளிது. உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப் போட வேண்டும்”, என்று சொல்வது நிச்சயம் சரியானதே!. இது கிறிஸ்துவின் அன்பினால் உந்தப்பட்டுச் செய்யப்படும் செயல். இதைச் செய்யாமல் கண்டு கொள்ளாமல் சென்றால் தான் அது தவறாகும்.

ஒருவன் கிறிஸ்துவுக்குள் பெற்ற அனுபவம், மற்றவனுக்குப் பயன்படுமாறு இருப்பது இறைவனின் வடிவமைப்பில் உள்ள உன்னதமான விஷயம். அதுவே சபையாகிய சரீரத்தை விழாமல் தக்கவைக்கிறது. எனவே, நீங்கள் கேட்கும் ‘அந்த’ நியாயம் தீர்த்தல் அவசியம்.

ஆனால், “நியாயம் தீர்த்தல்” என்பதே தவறான பதம். உணர்த்துவித்தல் என்பதே சரியான சொல். அது அடிப்படைக் கிறிஸ்தவப் பண்பு! அது இல்லாமல், கிறிஸ்தவனாக இருப்பது போலித்தனமானது. சுட்டிக்காட்டல், குறைகளை எடுத்துகூறல், உணர்த்துவித்தல் இதெல்லாம் இல்லாத தீர்க்கதரிசனங்களும் இல்லை, தேவ அன்பும் இல்லை. இதைச் சரியாக உணரவில்லையானால் ஒரு பாவிக்கும் மனந்திரும்புதலின் அவசியத்தைக்கூடச் சொல்ல இயலாது.

நியாயம் தீர்த்தல் என்றால் “விழுந்துகிட!” என்பது. உணர்த்துவித்தல் என்பது ‘விழுந்துவிடாதே!’ என்று எச்சரிப்பது. எனவே, கடின இருதயத்தோடு “என்னை நியாயம் தீர்க்க நீ யார்?” என்ற முரட்டுக் கேள்வியைக் கேட்காமல், அதன் பின்னால் இருக்கும் உணர்த்துதலை அறிந்துகொள்வது அடுத்தகட்ட ஆவிக்குறிய வளர்ச்சிக்கானது. கிறிஸ்துவுக்குள் வளரும் யாருக்கும் இருக்கவேண்டுய ஆவிக்குறிய பண்பு அது. ஏனென்றால், !

தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், இதுதான் சான்ஸ் என்று கல் எறிவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா?. பொய்த்தீர்கதரிசனங்கள், மக்களை வழிவிலச் செய்யும் உபதேசங்கள், ஆவிக்குறிய வளர்ச்சிக்கு கேடுவிளைவுக்கும் கூடுகைகள் ஆகியவற்றை கிறிஸ்தவர்கள் கண்ணியத்துடன், வேத ஆதாரத்துடனும் ஆவியானவர் துணையோடு செய்வது அவசியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *