
“பிறரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள மனமற்ற போதககர்கள் மிகவும் அபாயமான ஆசாமிகள்” என்று பல வருடங்கள் முன் எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ( பாஸ். மேத்யூஸ்) ஒரு முறை சொன்னார்.
அப்பொல்லோவைப் போல வேதாகமங்களில் வல்லவர்களாகவும், ஆவியில் அனலுள்ளவர்களாகவும், திட்டமாய் போதகம் பண்ணுபவர்களாக இருந்தாலும், நீங்களும், அதிக திட்டமாய் இறைவழியை விவரிக்கும் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போன்ற மக்களை ஐக்கியத்தில் – உங்கள் வட்டத்தில் – வைத்திருப்பது அவசியம்.
உங்கள் உபதேசங்கள் ஆவியானவரால்தான் உறுதி செய்யப்படுகின்றன என்றாலும் ஐக்கியம் என்பதை அவரே உண்டுபண்ணுகிறபடியால், நல்ல நட்பு வட்டத்தை ஆவிக்குரிய நிலையில் நீங்கள் சிறப்பாக இருந்தாலும் விட்டுவிடாதீர்கள். தனியாக ஒதுங்கிக்கொண்டே இருக்காதீர்கள்.
சொந்தக் கருத்துக்களை எடுத்து உபதேசிக்காமல், முன்பு எழுதப்பட்ட வேதவாக்கியங்களைக் கொண்டே இயேசுவைக் கிறிஸ்து என்று திருஷ்டாந்தப்படுத்தும் போதனைகள் அப்பொல்லோவிடம் பெருகி இருந்தது அப்படிப்பட்ட ஐக்கியங்களினால்தான்.
இது போதகர்களுக்கான ஆலோசனையாக இருந்தாலும், அனைவருக்குமானதே!
மேலும் வாசித்து தியானிக்க: அப்போஸ்தலர் 18: 24-28.