
நீங்கள் வீணடித்த வாழ்க்கை
குறிப்பு: பதிவு ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. மால்கம் மஃகரிட்ஜ் ஒரு ஆங்கில எழுத்தாளர். கொஞ்சம் நம்ம ஊர் ஆர்.கே.நாராயணன் மாதிரி. மால்கம் ஜாலியாக ஆனால் அதேசமயம் ஆழமாக எழுதுபவர். ஏகப்பட்ட அனுபவங்கள் அவருக்கு. ஆங்கிலேயர். ஆனால், இரஷ்யாவில் கம்யூனிசத்தின் தொடக்க காலங்களில் பிரச்சனைகள் மிகுந்த பகுதிகளில் இருந்திருக்கிறார். உக்ரேனியப் பஞ்சத்தைக் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலும் சில காலம் வாழ்ந்தார். மதர் தெரசாவை சந்தித்திருக்கிறார். அவருடனும் நல்ல நட்பு இருந்தது. மஃகரிட்ஜ் சந்தித்த எக்கச்சக்கமான நபர்கள்,…

தூங்கும் மிருகம்?
ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்று சொல்வார்கள். அதாவது, நமக்குள் இருக்கும் நன்மையான எண்ணங்களுக்கும், தீமையான எண்ணங்களுக்கும் உருவமும் உயிரும் அளித்தால் நமக்குள் ஒரு நல்ல மனிதனும் தீய மிருகமுமாக நமக்குள்ளேயே இருவர் உண்டு – என்கிற சிந்தனை உலகத்தில் இருந்து வரும் ஒரு சிந்தனை.! சிலருக்கு நல்லவன் வெளியே உலாவிக்கொண்டிருப்பான் – அவர்கள் நல்லவர்கள். சிலருக்கு தீயவன் வெளியே. அவர்கள் மோசமான மிருகங்கள். பெரும்பாலும் நல்லவர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை…

தொய்ந்துபோன கட்டுமானம்
பாதியில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுக்கிடக்கும் வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? செங்கல்கள் சிதிலமடைந்து, செடிகொடி முளைத்து, துருப்பிடித்த கம்பிகள் நீட்டிக்கொண்டு- பார்ப்பவருக்கெல்லாம் ஒருவித அவஸ்ததை உண்டாக்கும். நான் தினமும் போகும் வழியில் அப்படிப் பாதியில் நிற்கும் பெரிய கட்டிடம் ஒன்று உண்டு. இன்று பேங்க் லோன் வாங்கிக்கட்டுவதால் இவற்றை அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும், இன்னும் பல மிச்சங்கள் ஆங்காங்கே உண்டு. அப்படி நிற்பவையெல்லாம் எவ்வளவு ஆசைகளுடன் அவை துவக்கப்பட்டிருக்கும்? பெரும்பாலும் அங்கே சிலரது கனவுகள் பாதியில் விழித்தவுடன் கொஞ்சமே நினைவில்…

Mr. கிறிஸ்தவன் SSLC, MBBS:
இதென்னடா தலைப்பு கிறுக்குத்தனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இது, தான் யார் என்று அடையாளம் புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனைப் பற்றியது. தொடர்ந்து பொறுமையாக வாசித்து தியானித்தால் புரியக்கூடும். சபைகளில் நிலவிவந்த குழப்பங்களைப் போக்க பல கடிதங்களை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியவையே இன்று புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அதில் வெவ்வேறு சபைகளுக்குத் தனித்தனியாக நாம் யார் என்பதை உச்சியில் அடித்தார்ப்போல் தெளிவாகப் பவுல் எழுதுகிறார். பெரும் மக்கள்கூட்டமான ரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையே…

தேவ பெலன்
‘ பாவியாகிய எனக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார்’ என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளும் எவரும் இரட்சிப்பு என்கிற சுதந்தரமாகிய பலனை அடைகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெற்ற பலன் அத்துடன் நம் வாழ்வில் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ச்சியாக வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ பெலனும் செய்கிறது. “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்று கொரிந்தியருக்கு எழுதும் முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கியமான திறவுகோலை விட்டுச் சென்றிருக்கிறார். இதை, ‘இரட்சிக்கப்பட்ட…

வயசானா சரியாகிவிடும்?
வயதும் அனுபங்களும் மட்டும் ஒரு மனிதனை நல்லவனாக வாழ வைத்துவிடும் என்றால் அறுபது எழுபதைத் தாண்டினால் அனைவரும் நல்லவர்களாகவும், மிகவும் நல்லவர்களாகவும் மாறி இருக்கவேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. வேதம் நமக்குப் போதிப்பது நல்லவர்களாக வாழ்வதைக் குறித்த அல்ல. மாறாக இவ்வுலகில் இரட்சிப்பையும் நித்தியமாக தேவனுடன் வாழும் சிலாக்கியத்தை அருளும் தேவ கிருபையையும். அதை நாம் அனுபவங்கள் வாயிலாககப் பெறுவதில்லை. கிறிஸ்துவால் பெறுகிறோம். இந்தக் கிருபை நம்மை நல்லவர்களாக ஆக்க…

கிருபை சத்தியம் கிறிஸ்து
கிறிஸ்து பூமியில் வந்தபோது கிருபையைக் குறித்துப் போதிக்கவில்லை. காரணம் அவர் மனு உருவில் வெளிப்பட்டதே கிருபையாகத்தான். அவர் கிருபையாக இருந்தார். (லூக்கா 18:13). சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கு அவர் பதில் சொல்லவில்லை. சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவர் அவர். நானே சத்தியம் என்றவர். கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம்…

உணர்ச்சிகளில் மாற்றம்
கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் “அகிறிஸ்தவ” உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களின் சுபாவங்களே இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் அதன் விளைவுதான். அநீதியின்பால் கோபம் கொள்ளல், அநியாயத்தின்மேல் எரிச்சல் அடைதல், தேவனுக்குப் பயப்படுதல், பிறர் வருத்தம் கண்டு…

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?
நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால், நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள். ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக…

உன்னால் முடியும் தம்பி
ஒரு புதுவருடம் துவங்கினால் போதும்; ஒரு முயற்சிப்பட்டியலை கையில் தயாரித்து வைத்துக்கொள்வது துவங்கிவிடும். இரட்சிப்பின் அனுபவத்துள் இருப்பவரும்கூடச் செய்தும் தவறு – தங்கள் சொந்த முயற்சியில் அவர்களாகவே சரிசெய்யக் கிளம்புவதுதான். ஆனால், தேவனுடைய உதவியின்றி தேவையற்ற எந்த வேண்டாதவைகளையும் – அப்பட்டமாகத் தெரிபவற்றையும்கூட – நம்மால் நீக்கவே இயலாது. நம்முடைய இயல்புகளை மாற்றிக்கொண்டால் வாழ்க்கையின் தரத்தையே மாற்றலாம் என்கிற எண்ணம் உலகத்தில் உண்டு. பல சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதப்படுவது இதன் அடைப்படையில்தான். உதாரணமாக, நீங்கள்…
- 1
- 2