
என் நாமத்தில் எதைக் கேட்டாலும்
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14) என்ற வசனம் சிறுவயதில் இருந்தே நமக்குப் பிடித்த வசனங்களுள் ஒன்றாக இருக்கும். என்னிடம் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று சிம்பிளாகச் சொல்லாமல், ஆரம்பத்திலேயே வருகிறதே ஒரு வார்த்தை. “என் நாமத்தினாலே…” என்று. அதென்ன? இயேசுவின் நாமத்தில் பிதாவே என்று தானே நாம் ஜெபித்துமுடிக்கிறோம். அப்படி முடிப்பதுதான் “என் நாமத்தினாலே” ஜெபிப்பதா? இதற்கு பதில் தெரிய, எதைக் கேட்டாலும் செய்வேன் அல்லது தருவேன் என்பதை…

எத்தனை பேர்களோ.. அத்தனை பேர்களுக்கும்.
எத்தனை எத்தனைபேர் இரட்சிப்பை விரும்பினாலும் அத்தனைபேரையும் இரட்சிக்க வல்ல மகாபெரிய இரட்சிப்பு அவருடைய இரட்சிப்பு. எத்தனை கோடிப்பேர் வந்தாலும் அத்தனைபேரையும் கழுவக்கூடிய வல்லமையான இரத்தம் அவருடைய இரத்தம். எத்தனைபேர் சமாதானம் வேண்டினாலும், அத்தனைபேரையும் அமைதலாக்கும் சமாதானம் அவருடைய சமாதானம். எவ்வளவு திரளான மக்கள் இயலாமல் வந்தாலும் அவர்களெல்லோரையும் தாங்கும் பெரிதான கிருபை அவருடைய கிருபை. எவ்வளவு வெறுமையில் கோடானுகோடிபேர் இருந்தாலும், அனைவரிலும் அன்புகூரக்கூடிய அளவுக்கு உன்னதமானது அவரது அன்பு. எவ்வளவு திரள்கூட்டம் மக்கள் அவர் அணைப்புக்குள் வந்தாலும்,…

எது கிறிஸ்தவ நாடு?
கிறிஸ்தவநாடு என்று இவ்வுலகில் எதுவும் கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரவேல் உட்பட. அவற்றைக் கிறிஸ்தவநாடுகள் என்று சொல்வது இந்தியா மதநல்லிணக்க நாடு, இங்கு அனைவரும் சமம் என்று சொல்வதைப் போன்ற நகைச்சுவை. பொதுவிலும், அரசு ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் தாராளமாக எழுதி இப்படி அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், நம் இந்தியா இன்று எப்படி இருக்கிறது என்பதை அறியாதோர் இருந்தால் அவர் பல வருடங்களாக நினைவின்றி இருந்திருக்கவேண்டும். எப்படித் தம்மைக் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் கிறிஸ்தவர் இல்லையோ அதேபோல் கிறிஸ்தவநாடு…

கல்வாரி சிந்தனைகள்-1
இவ்வுகவரலாற்றை மட்டுமல்ல, இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருடைய வரலாற்றையும் இரண்டாகப் பிரிக்கிறது சிலுவை. கிறிஸ்துவின் சிலுவைக்கு முன் சிலுவைக்குப்பின் என்று ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வும் பெரும் பிரிவாகப் பிரிக்கப்படுவது நிச்சயம். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம். தேவகோபாக்கினைக்குத் தப்பிக்கொண்டோம். ——————————————————————————————————— இவன் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்கிறான், இது யூதர்களின் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமானது என்று வேதபாரகர் முதலில் இயேசுவின்மேல் குற்றம்சாட்டத்துவங்கினர். ரோமச் சட்டங்களின்படி இது ஒரு பெரியவிஷயமாகவும், இதெல்லாம் இயேசுவை மரணதண்டனைக்கு உரியவராகக் காட்டவில்லை என்று கருதிய பிலாத்து இவனிடத்தில் ஒரு குற்றமும்…

இதயமாற்று சிகிச்சை
ஜெபத்தில் உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் கொண்டு செல்லுபோதெல்லாம் அவருடைய இருதயத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம் என்றார் கிறிஸ் லன்கார்ட். அதாவது, ஒவ்வொருமுறை ஜெபிக்கும்போதும் ஒரு இருதய மாற்று சிகிச்சையை உணர்ந்தால், அதுதான் சரியான ஜெபம். ஆவிக்குறிய வாழ்வின் ஆரம்பத்தில் இச்சிகிச்சை கடினமானது தான். ஆனால், அந்தக் கடினத்திற்குக் காரணம் அவரல்ல, நம் இருதயமே! நம் இருதயத்தின் தன்மை, அதன் போக்கு என்று எல்லாவற்றையும் என்றோ அறிந்தவர் அவர் என்பதை, நம் இருதயம் (நாம்) ஏற்கத் தாமதாவதால் ஏற்படும்…

இருக்கிறேன்
வெள்ளைச்சாமி என்பவர் கருப்பாக இருப்பார். ஆரோக்கியசாமி ஆஸ்பத்திரிக்குப் போவார். பெயருக்கும் ஆளுக்கும் அல்லது குணத்திற்கும்கூடச் சம்பந்தம் இருக்காது. பெஞ்சமின் என்று எனக்கு என் தாத்தாவின் பெயரை இட்டார்கள். பெஞ்சமின் (அல்லது பென்யமின்) என்பதற்கு தெற்கின் மகன் அல்லது வலது கரத்தின் மகன் என்று பொருள். திருநவேலி வலது கைக்காரனுக்கு இந்தப்பெயர் கொஞ்சம் பொருத்தமாக இருப்பது தெரிகிறது. முதலிலேயே நமக்குப் பெயரிடப்பட்டுவிடுவதால் (சிலருக்குப் பிறக்கும் முன்பே) , குணத்திற்கு, நிறத்திற்கு, ஆளுக்கு என்று பொருத்தமற்ற பெயர்கள் நமக்கு அமைந்துவிடுகிறது….

இந்த நம்பிக்கை!
கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் எங்கள் நம்பிக்கை வீண். நாங்கள் உரைக்கும் எந்தவார்த்தையும் வீண் என்கிறார் பவுல். அவர் உயிர்தெழுந்திருக்காவிட்டால், கிறிஸ்தவமும் வீண். கிறிஸ்தவர்களும் வீண். நாமெல்லாம் வெறும் முட்டாள்களாக இருந்திருப்போம். ஆனால், இது எப்படிப்பட்ட நம்பிக்கை? 2000த்துச் சொச்சம் வருடங்களாக, தலைமுறை தலைமுறைகளாக வரும் இந்த நம்பிக்கை வெறும் முரட்டுப் பக்தர்களால் பின்பற்றப்படும் குருட்டு நம்பிக்கை அல்ல. மாறாக, பெரும் சவால்களையும், எதிர்விவாதங்களையும் முறியடித்துத் தாங்கி வந்த நம்பிக்கை. கண்கள் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளால் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள்…

இரத்தம் ஏன்? பலி ஏன்?
இயேசு சிலுவையில் தொங்கி மரித்தார். மரணம் கொடூரமாக, இரத்தமும் நீருமாக அனேகமாய் உடலில் இருந்த அனைத்து இரத்தமும் (தோராயமாக ஐந்து லிட்டர்) சிந்த மரித்தார். இப்படிப் பட்ட மரணம் எல்லோருக்கும் நடப்பதில்லை. அரிதினும் அரிதான ஒரு மரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் ஏன் இப்படிப்பட்ட ஒரு மரணத்தை அதுவும் இரத்தத்தை மையமாகக் கொண்ட – இரத்தமயமான – ஒரு மரணத்தைத் ஏன் தேர்ந்தெடுத்திருக் வேண்டும்? அதில், இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன? அவர் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவரும்…

ஆவியானவரும் ஆவிகளும்
கிறிஸ்தவமே ஆவிக்குரியது. தேவனும் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24). நாமும் ஆவிக்குரியவர்கள். ஆனால், ‘ஆவி’ – என்பதைக் குறித்த போதனைகள் மிகவும் தெளிவாகக் கற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது பலவித வஞ்சனைகளுக்கு நேராகவே பெரும்பாலோனோரை நடத்திச் செல்கிறது. நான் ஆவிக்குறிய சபைக்குச் செல்கிறேன் என்று சொல்லும் – பழம் தின்று கொட்டைபோட்ட கிறிஸ்தவர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்பவர்களும்கூட, இந்தச் சவாலில் தோற்றுப்போய், ஏமாந்து, ஆட்டம் போடும் ஆவிகளையெல்லாம் பரிசுத்த ஆவியானவர் என்று நம்புவதே நடக்கிறது. ஆட்டம் போடாவிட்டால் ஆவியானவர் அவனில் இல்லை…

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு…
நம் ஆண்டவருக்கு மிகப் பெரிதான சந்தோஷம் என்னவாக இருக்கும்? பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும், அவருக்குள்ளும் சிருஷ்டிக்கப்பட்டிருக்க அதென்ன பெரிதான சந்தோஷம் கிறிஸ்துவுக்கு என்று புதிதாக ஒன்று இருக்கமுடியும்? அதுவும் மரணத்தைக் குறித்த துயரத்தையும் ஒதுக்கிவைக்கக்கூடிய அளவுக்கு? பாவத்தில் உளலும் தன் மணவாட்டியாகிய சபையைத் தன் பரிசுத்த இரத்தத்தைத் தந்து, கழுவி, ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளுக்காக, அவள்பால் கொண்ட தன் எல்லையில்லா அன்பினால் ஆயத்தப்படுத்தும் பெரும்…