Benny Alexander

இருக்கிறேன்

இருக்கிறேன்

வெள்ளைச்சாமி என்பவர் கருப்பாக இருப்பார். ஆரோக்கியசாமி ஆஸ்பத்திரிக்குப் போவார். பெயருக்கும் ஆளுக்கும் அல்லது குணத்திற்கும்கூடச் சம்பந்தம் இருக்காது. பெஞ்சமின் என்று எனக்கு என் தாத்தாவின் பெயரை இட்டார்கள். பெஞ்சமின் (அல்லது பென்யமின்) என்பதற்கு தெற்கின் மகன் அல்லது வலது கரத்தின் மகன் என்று பொருள். திருநவேலி வலது கைக்காரனுக்கு இந்தப்பெயர் கொஞ்சம் பொருத்தமாக இருப்பது தெரிகிறது.  முதலிலேயே நமக்குப் பெயரிடப்பட்டுவிடுவதால் (சிலருக்குப் பிறக்கும் முன்பே) , குணத்திற்கு, நிறத்திற்கு, ஆளுக்கு என்று பொருத்தமற்ற பெயர்கள் நமக்கு அமைந்துவிடுகிறது….

இந்த நம்பிக்கை!


இந்த நம்பிக்கை!


கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் எங்கள் நம்பிக்கை வீண். நாங்கள் உரைக்கும் எந்தவார்த்தையும் வீண் என்கிறார் பவுல். அவர் உயிர்தெழுந்திருக்காவிட்டால், கிறிஸ்தவமும் வீண். கிறிஸ்தவர்களும் வீண். நாமெல்லாம் வெறும் முட்டாள்களாக இருந்திருப்போம். ஆனால், இது எப்படிப்பட்ட நம்பிக்கை? 2000த்துச் சொச்சம் வருடங்களாக, தலைமுறை தலைமுறைகளாக வரும் இந்த நம்பிக்கை வெறும் முரட்டுப் பக்தர்களால் பின்பற்றப்படும் குருட்டு நம்பிக்கை அல்ல. மாறாக, பெரும் சவால்களையும், எதிர்விவாதங்களையும் முறியடித்துத் தாங்கி வந்த நம்பிக்கை. கண்கள் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளால் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள்…

இரத்தம் ஏன்? பலி ஏன்?

இரத்தம் ஏன்? பலி ஏன்?

இயேசு சிலுவையில் தொங்கி மரித்தார். மரணம் கொடூரமாக, இரத்தமும் நீருமாக அனேகமாய் உடலில் இருந்த அனைத்து இரத்தமும் (தோராயமாக ஐந்து லிட்டர்) சிந்த மரித்தார். இப்படிப் பட்ட மரணம் எல்லோருக்கும் நடப்பதில்லை. அரிதினும் அரிதான ஒரு மரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் ஏன் இப்படிப்பட்ட ஒரு மரணத்தை அதுவும் இரத்தத்தை மையமாகக் கொண்ட – இரத்தமயமான – ஒரு மரணத்தைத் ஏன் தேர்ந்தெடுத்திருக் வேண்டும்? அதில், இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன? அவர் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவரும்…

ஆவியானவரும் ஆவிகளும்

ஆவியானவரும் ஆவிகளும்

கிறிஸ்தவமே ஆவிக்குரியது. தேவனும் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24). நாமும் ஆவிக்குரியவர்கள். ஆனால், ‘ஆவி’ – என்பதைக் குறித்த போதனைகள் மிகவும் தெளிவாகக் கற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது பலவித வஞ்சனைகளுக்கு நேராகவே பெரும்பாலோனோரை நடத்திச் செல்கிறது. நான் ஆவிக்குறிய சபைக்குச் செல்கிறேன் என்று சொல்லும் – பழம் தின்று கொட்டைபோட்ட கிறிஸ்தவர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்பவர்களும்கூட, இந்தச் சவாலில் தோற்றுப்போய், ஏமாந்து, ஆட்டம் போடும் ஆவிகளையெல்லாம் பரிசுத்த ஆவியானவர் என்று நம்புவதே நடக்கிறது. ஆட்டம் போடாவிட்டால் ஆவியானவர் அவனில் இல்லை…

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு…

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு…

நம் ஆண்டவருக்கு மிகப் பெரிதான சந்தோஷம் என்னவாக இருக்கும்? பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும், அவருக்குள்ளும் சிருஷ்டிக்கப்பட்டிருக்க அதென்ன பெரிதான சந்தோஷம் கிறிஸ்துவுக்கு என்று புதிதாக ஒன்று இருக்கமுடியும்? அதுவும் மரணத்தைக் குறித்த துயரத்தையும் ஒதுக்கிவைக்கக்கூடிய அளவுக்கு? பாவத்தில் உளலும் தன் மணவாட்டியாகிய சபையைத் தன் பரிசுத்த இரத்தத்தைத் தந்து, கழுவி, ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளுக்காக, அவள்பால் கொண்ட தன் எல்லையில்லா அன்பினால் ஆயத்தப்படுத்தும் பெரும்…

அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும் 


அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும் 


ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஆர்டிக் பகுதியில் வசிக்கும் ஒரு எஸ்கிமோ குடும்பத்தைப் பற்றியது. ஆர்டிக், அண்டார்டிகா (-58°F), அலாஸ்கா என்றாலே நாம் குஷியாகிவிடுவதுண்டு அல்லவா?. அதற்கு அங்கிருக்கும் ஐஸ் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கை முறையும் கூட – அது மிகவும் வித்தியாசமானதும், ஆச்சரியங்களும் நிறைந்தது.  ஆர்டிக் பகுதில் மேலே ஐஸ்கட்டியும், கீழே நீரோட்டமும் கொண்ட பகுதிகள் ஏராளம். இவ்வாறு நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தாலும், கீழே சில அடிகளுக்குப் பின் இருப்பது ஆழமான உறையவைக்கும் நீர்ப்பகுதிதான். (சூரியன்…

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

உத்திரம் உங்கள் கண்களிலேயே இருந்ததென்றால் அது இயலாது. ஆகாது. அதையே இயேசு சொன்னார். முதலில் தன்னைச் சீர்செய்த அவசியம் நிச்சயம் தேவை. ஆனால், நியாயமே தீர்க்கக்கூடாது; குற்றப்படுத்தவே கூடாது என்பது இதற்குப் பொருள் அல்ல! “என் கண்களில் ஒரு பெரிய உத்திரமே இருந்ததப்பா, நான் அதையே எடுத்துப்போட என்னுள் வாழும் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார்; உன்னில் இருக்கும் துரும்ப அவருக்கு எம்மாத்திரம். நீ அதை உணர்ந்தால், அதை எடுத்துப்போடவது எளிது. உன் கண்ணில் இருக்கும் துரும்பை…

நீங்கள் vs நீங்கள்

நீங்கள் vs நீங்கள்

ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலை இன்னொரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலையுடன் ஒப்பிடப்பட்டு அளவிடப்படுவதில்லை. மாறாக ‘இன்றைய நீங்கள்’ நேற்றைய நீங்களைவிட எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்பதில்தான் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இயலும்.  இந்த மதிப்பீடும்கூட இன்று கிறிஸ்துவுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?  நேற்று எப்படி ‘அவருக்குள்’ இருந்தீர்கள்? என்று அவரை அடிப்படையாகக் கொண்டதுதான்!.  2025ல் எப்படி கிறிஸ்துவுடனான உங்கள் உறவு எப்படி?,  என்பதை உங்கள் 2024டன் எப்படி இருந்தீர்கள்; அல்லது இன்னும் கொஞ்சம் போய்,  தேவ உறவுக்குள் வரும்முன் இரட்சிப்பை…

ஏரியாமாரி…

ஏரியாமாரி…

ஒரு புது ஊருக்கு மாறி செல்பவர்கள் அல்லது ஏரியா மாறிச் செல்பவர்கள், “ நல்ல ஏரியாவுல வீடு பாக்கணும், சுத்தி இருக்கிற ஆள்கள் வீடுகள் நல்லா இருக்கணும், சொந்த பந்தங்கள் இருக்குற ஏரியாண்ணா சிறப்பு!” என்றெல்லாம் பார்த்துதான் வீடு குடிபுகுவது வழக்கம். அதுவும் வீடு இடம் வாங்கவேண்டும் என்றால் சாதிசனமெல்லாம் பார்க்காமல் ஒரு ஏரியாவுக்குள் செல்லமாட்டர். ஏழைகள் குடிசைகள் வாழும் பகுதி என்றால், அந்த ஏரியாவே வேண்டாம் என்றுதான் ஒதுங்குபவர்கள் தாம் நாம் அனைவரும். ஆனால், இதற்கு…

பரலோகம் நுழையத் தகுதி

பரலோகம் நுழையத் தகுதி

இரட்சிக்கப்பட்ட உடன் ஒருவர் பரலோகம் போய்விடுவதில்லை! ஏன்? அப்படிச் சென்றால் ஒரு மணி நேரம்கூட அவரால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியாது. கற்றுக்கொண்ட, கற்றவைகளில் நிச்சயித்த, நிலைத்த மற்றும் முற்றும்முடிய இரட்சிக்கப்பட்ட நிலைகளைக் கற்றுத்தேற இவ்வுலகே சரியான இடம்.  முன்பு சரியற்ற இடமாக இருந்த அதே இடம் இன்று ஒரு பயிற்சிக்களமாக மாற்றப்படுகிறது. இதை அறியாமல், எப்படியோ பரலோகம் சென்று இந்த வண்டி சேர்ந்துவிடும் என்று கனவுகண்டு கொண்டிருந்தால் வண்டி பஞ்சராகிப் பரிதவிக்கும் அபாயம் உண்டு. மாறாக இவ்வுலக வாழ்வின்…